மும்பை: மத்திய அரசு பிபிஎஃப் திட்டத்தின் குறைந்தபட்ச வைப்பு காலத்தை, 15 வருடத்தில் இருந்து 20 வருடங்களாக அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக செய்திகள் கிடைத்துள்ளது, மேலும் இதுக்குறித்த அறிவிப்புகள் மத்திய பட்ஜெட் வெளியீட்டில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்பவர் 7 வருடத்தில் முதலீடு செய்ய பணத்தில் ஒரு பகுதியையும், 15 வருடங்களுக்கு பின் முழு பணத்தையும் எடுத்து கொள்ள முடியும்.
இக்கால அளவை 15 வருடத்தில் இருந்து 20 வருடமாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
அதிக வட்டி
மேலும் இத்திட்டம் சேமிப்பை மையமாக கொண்டவர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். 20 வருட திட்டத்தை அறிவிக்கும் மத்திய அரசு அதிகப்படியான வட்டி அளிக்கும் என்பது மிக உறுதி. மேலும் இந்த முதலீட்டு திட்டம் 80சி திட்டத்தின் கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அதிகப்படியான முதலீடு கிடைக்கப்பெறும் என மத்திய அரசு நம்புகிறது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் 1கோடி ரூபாய் மற்றும் 1கோடி ரூபாய்க்கும் அதிகமாக டெபாசிட் செய்யும் வைப்பாளர்களுக்கு வித்தியாசமான வட்டி விகிதத்தை வங்கிகள் அளித்து வருகிறது. மேலும் 1கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்பு நிதியை வைுப்பு காலம் முடியும் முன்னரே எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது.
முதிர்வு காலம்
இனி ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்பு நிதியை, முதிர்வு காலம் முடிந்த பின்னரே முறித்துக்கொள்ள வேண்டும் என்றும், தொகைக்கு ஏற்ப கூடுதல் வட்டி விகிதமும் அளிக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கட்டுமானத்துறை
மேலும் இத்திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடு இந்திய கட்டுமான துறையின் வளரச்சிக்கும் மிகவும் சாதகமாக அமையும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு நிறுவனங்கள்
மும்பையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிதியமைச்சர், இந்திய கட்டுமான துறையில் முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் மிகவும் ஆர்வமுடன் இருப்பதாகவும், இவற்றை அனைத்தையும் கவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
வரி வசூல்
மேலும் வரி வசூல் இலக்கை அடைய தகாத வழிமுறையை மத்திய அரசு கையாழுவதில்லை என்றும், கடந்த ஒரு வருடத்தில் வரி குறைப்பு மற்றும் செலவீன அதிகரிப்பு ஆகியவற்றை குறிப்பிட்டார் அருண் ஜேட்லி.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications