மும்பை: லார்சன் அண்ட் டர்போ நிறுவனம் திங்கட்கிழமை 2014ஆம் ஆண்டின் 3வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 3வது காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 9 சதவீதம் அதிகரித்தது.
மேலும் சந்தை வல்லுனர்கள் இந்நிறுவனத்தின் பவர் மற்றும் மெட்டலர்ஜி துறையில் வர்த்தகம் குறைந்ததால் இந்நிறுவனம் இக்காலாண்டில் நஷ்டத்தை சந்திக்கும் என கணித்திருந்தது. இக்கணிப்புகளை மீறி இந்நிறுவனம் லாபம் அளவை பதிவு செய்துள்ளது.
இந்நிறுவனம் நீர்முழ்கி கப்பல் முதல் மொட்ரோ ரயில் வரை பல துறைகளில் செயல்பட்டு வருகிறது, 3ஆம் காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் அளவு 8.67 பில்லியன் ரூபாய் பெற்றுள்ளது (139.5 மில்லியன் டாலர்).
ரெயூட்டரஸ் பத்திரிக்கையின் தகவல் படி இந்நிறுவனத்தின் சராசரி லாப அளவு 11.47 பில்லியன் ரூபாயாகும்.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் பங்குகள் இன்று மும்பை பங்குச்சந்தையில் 6.6 சதவீதம் சரிந்தது, நிஃப்டியில் 1.6 சதவீதம் சரிந்ததது.