மும்பை: 25,000 பணியாளர்களை நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற திட்டமிட்ட டிசிஎஸ் நிறுவனம் பணியாளர்களின் எதிர்ப்பு மற்றும் அதர்த்தமற்ற காரணங்களுடன் பணியாளர்களை வெளியேற்றுவதை ஊடகங்கள் வெளியிட்டதை அடுத்து இந்நிறுவனம் தனது வெளியேற்ற நடவடிக்கை நிறுத்திக் கொண்டது.
இதனால் இந்நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு எண்ணிக்கை குறையுமா அல்லது ஆட்சேர்ப்பு பணிகள் தற்காலிகமாக முடக்கப்படுமா என பலரும் கேள்வி எழுப்பினர், இக்கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டிசிஎஸ் நிறுவனத்தின் சீஇஓ பதில் அளித்துள்ளார்.
ஆட்சேர்ப்பு
டிசிஎஸ் நிறுவனத்தில் 2016ஆம் நிதியாண்டில் நாட்டில் முக்கிய கல்லூரிகளில் இருந்து 35,000 பிரஷ்ஷர்களை நிறுவனத்தில் சேர்க்கும் திட்டத்தில் எந்தவிதமான மாற்றம் இல்லை என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என்.சந்திரசேகர் தெரிவித்தார்.
35,000 பிரஷ்ஷர்கள்
இந்நிறுவனத்தில் 2016ஆம் நிதியாண்டில் 35,000 பட்டம் பெறப்போகும் மாணவர்களை டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்க்க உள்ளதாக கடந்த அக்டோபர் மாதம் இந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இதில் 25,000 பிரஷ்ஷர்களை சேர்க்கும் பணி முடிந்துவிட்டதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
1,000 பணியாளர்கள்
மேலும் இந்நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையில் 1,000 பணியாளர்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றியுள்ளது. இந்நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை நிறுத்திவிட்டதாக அறிவித்தாலும், தற்காலிகாகவோ அல்லது மறைமுகமாகவோ இப்பணிகள் தொடர்ந்து நடத்தி வருகிறது என இந்நிறுவன பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாஸ்காம்
2016ஆம் நிதியாண்டில் நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 12-16 சதவீதம் வரை அதிகரிக்கும் என நாஸ்காம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இத்துறையின் வர்த்தகம் 211 பில்லியன் டாலர் வரை எட்டும் என நாஸ்காம் கணக்கிட்டுள்ளது.
More From GoodReturns

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications