லண்டன்: இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம், பணியாளர்கள் வெளியேற்றம் மற்றும் மறுசீரமைப்பு திட்டங்கள் என பல பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டாலும், கடந்த 5 வருடத்தில் உலகளவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டாக டிசிஎஸ் உருவெடுத்துள்ளது.
லண்டனை சேர்ந்த பிராண்டு மதிப்பீடு நிறுவனமான பிராண்டு பைனான்ஸ் நிறுவனம் உலக நிறுவனங்களின் பிராண்டு மதிப்பிட்டை ஆய்வு செய்து வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்ளில் டிசிஎஸ் முன்னணிலை வகிப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ்
2010-2015ஆம் ஆண்டுகளில் டிசிஎஸ் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 2.3 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்து 8.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்திற்கு பிராண்டு பைனான்ஸ் நிறுவனம் AA+ தரத்தையும் அளித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் உலகளவில் 4 முக்கிய மென்பொருள் சேவை நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
மதிப்பீடு
பிராண்டு பைனான்ஸ் நிறுவனம் ஒரு நிறுவனத்தின் நன்மதிப்பு, நிறுவனத்தின் சொத்து மதிப்பு, நிதியியல் நிலை ஆகியவற்றை ஆராய்ந்து பின்னரே தரத்தை அறிவிக்கும்.
டிவிட்டர்
இதுக்குறித்து பிராண்டு பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான டேவிட் ஹெய்க் கூறுகையில், "2015ஆம் ஆண்டில் பிற துறை நிறுவனங்களை விட ஐடித்துறை நிறுவனங்கள் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது, இதில் டிவிட்டர் நிறுவனத்தின் மதிப்பு 3 மடங்கு உயர்ந்து 4.4 பில்லியன் டாலராக உள்ளது. அதேபோல் டிசிஎஸ் நிறுவனம் 271 சதவீதம் உயர்வந்து 8.7 பில்லியன் டாலராக உள்ளது" என தெரிவித்தார்.
பல துறை முதலீடு
இந்நிறுவனம் தனது முதலீட்டை பல துறைகளில் விரிவாக்கம் செய்துள்ளது இதன் மூலம் இந்நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு குறைந்த காலகட்டத்தில் அதிகளவில் வளர்ந்துள்ளது. மேலும் 2014ஆம் ஆண்டில் 50க்கும் மேற்பட்ட வருதுகளை இந்நிறுவனம் வாங்கியுள்ளது.
பணியாளர்கள் வெளியேற்றம்
இந்நிறுவனத்தில் பணியாளர்கள் வெளியேற்ற நடவடிக்கைகளை டிசிஎஸ் நிர்வாகம் குறைத்துள்ளதாகவும், இவை மேலும் தொடரப்போவதில்லை எனவும் டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்தள்ளது. ஆனால் பணியாளர்கள் மத்தியில் இன்னமும் இதற்கான பதட்டம் நிலவுவதாகவும் தெரிவித்தனர்.
பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 0.87 சதவீதம் குறைந்து 2657.40 புள்ளிகளாக குறைந்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications