பெங்களுரூ: நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம், 2012ஆம் ஆண்டுக்குப்பின் நிறுவனத்தின் புதிய சிஇஓவான விஷால் சிக்கா தலைமையில் 1,200 கோடி ரூபாய் முதலீட்டில் பனாயா என்னும் அமெரிக்கா நிறுவனத்தை கைபற்றி சில நாட்களே ஆன நிலையில், அடுத்த நிறுவனத்தை கைபற்ற திட்டமிட்டு வருகிறது.
தற்போது இன்போசிஸ் நிறுவனம் காற்றின் தரத்தை கண்டறியும் உபகரனத்தை (air quality detectors) உருவாக்கும் ஒரு துவக்க நிறுவனத்தை கையகப்படுதும் முயற்சியில் இறங்கியுள்ளது.
விஷால் சிக்கா
காற்றின் தரத்தை கண்டறியும் உபகரனத்தை தயாரிக்கும் ஒரு சிறு நிறுவனத்தில் இன்போசிஸ் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதை கடைகளில், அடுக்கு மாடி கட்டிடங்கள், மருத்துவமனை மற்றும் சுரங்கம் போன்றவற்றில் பயன்படுத்த முடியும். மேலும் இதனை கிளவுட் மூலம் இணைத்து தகவல்களை உடனுக்குடன் பெறலாம் என இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் விஷால் சிக்கா தெரிவித்தார்.
பெயர் வெளியிடவில்லை
இந்நிறுவனத்தின் பற்றி அனைத்தையும் தெரிவித்தாலும் நிறுவனத்தின் பெயரை மட்டும் விஷால் சிக்கா தெரிவிக்க வில்லை.
இண்டர்நெட் ஆஃப் திங்ஸ்
இந்த பெயர் தெரியாத நிறுவனம் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் என்னும் புதிய துறையில் முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்தாக். இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் என்பது கம்பியூடிங் மற்றும் நான்-கம்பியூடிங் உபகரணங்கள் மத்தியில் இணைப்பை உண்டாக்கி, தகவல்களை பெறுதல். இதனைக் கொண்டு புதுமையான வர்த்தக உலகம் வருவாகி வருகிறது.
ஏப்ரல் மாதம்
இந்த நிறுவனத்தை கையப்படுத்தும் பணி வருகிற ஏப்ரல் மாதத்தில் முழுமையாக முடிவடையும் என இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
12 நிறுவனங்கள்
விஷால் சிக்கா திட்டத்தின் படி அடுத்த 5 வருடங்களில் 12க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கைபற்றுவது தான்.
நிதி ஒதுக்கிடு
இன்போசிஸ் நிறுவனம் புதிதாக கைபற்றம் நிறுவனங்களில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யவும், நிறுவனங்களை கைபற்ற 5 பில்லியன் டாலர் நிதியை இன்போசிஸ் நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
பிக் டேட்டா
மேலும் அடுத்த தலைமுறை டெக்னாலஜி என போற்றப்படும் பிக்டேட்டா துறையில் இன்போசிஸ் தற்போது 76 வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இதன் அளவை அடுத்து இரண்டு வருடத்திற்குள் 1,000 ஆக உயர்த்த இன்போசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.