மும்பை: ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ, 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் 2,000 கார்களை விற்கப்போவதாக இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. 2014ஆம் ஆண்டில் இந்நிறுவனம் 1,200 கார்களை விற்றுள்ளது.
இந்திய சந்தையில் கார் விற்பனையை துவங்கி சில வருடங்களே ஆன நிலையில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி சிறப்பாக இருப்பதாக இந்நிறுவனத்தின் இந்திய கிளையின் நிர்வாக இயக்குனர் தாமஸ் தெரிவித்தார்.
வால்வோ இந்தியா
2007ஆம் ஆண்டு இந்தியாவில் விற்பனையை துவங்கிய இந்நிறுவனம், தற்போது உற்பத்தி ஆலையை கூடிய விரைவில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தாமஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வால்வோ கார்களின் விலை அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.
புதிய கார்கள்
2015ஆம் நிதியாண்டில் நான்கு புதிய மாடல் கார்களை வால்வோ வெளியிட உள்ளதாகவும், இதில் ஆடம்பர பரிவை சேர்ந்த XC90 ரக காரையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
விற்பனை
தற்போது இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வரும் வால்வோ, தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் பிரத்தியேக ஷோரூம் கொண்டு விற்பனை செய்து வருகிறது. இதில் எஸ்80, எஸ்60, எக்ஸ்சி60, வி40 மற்றும் எக்ஸ்சி90 ரக கார்களை விற்பனை செய்து வருகிறது.
கார் தயாரிப்பு நிறுவனங்கள்
கடந்த 10 வருடங்களில் இந்தியாவில் பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் விற்பனை கிளைகள் மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. நாட்டின் ஆட்டோமொபைல் உற்பத்தி சந்தை வேகமாக வளர்ந்து வருவதால் நாட்டின் ஏற்றுமதி அளவும் கணிசமாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications