டெல்லி: நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைக் கலாநிதி மாறன் கைகழுவிய பின், இந்நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளும் அஜய் சிங்கிடம் வந்தது.
ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்தில் அஜய் சிங் பல மாற்றங்களைச் செய்து வரும் நிலையில் இந்நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரியான கனிஸ்வரன் அவிலி நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
கலாநிதி மாறன் நிர்வாகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இந்நிறுவனத்தில் இணைந்த கனிஸ்வரன், தனது சொந்த விருப்பத்தின் பெயரில், புதிய துறை மற்றும் புதிய வேலையைத் தேர்ந்தெடுக்க உள்ள காரணத்தினால் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாகத் தெரிவித்தார்.
இவரது தலைமையில், இந்நிறுவனம் பல புதிய சலுகை திட்டங்களை அறிவித்து, இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறையில் பல முக்கிய மாற்றங்களைச் செய்தது.
பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி இந்நிறுவனத்தின் நிறுவனரான அஜய் சிங் காலாநிதி மாறன் மற்றும் கேஏஎல் நிறுவனம் வைத்திருக்கும் 58.46 சதவீத ஸ்பெஸ்ஜெட் நிறுவன பங்குகளைக் கைபற்றி மீண்டும் நிறுவனத்திற்குள் நுழைந்தார்.