பெங்களூரு: விமான எரிபொருள் மீது, மாநில அரசு விதிக்கப்படும் விற்பனை வரியை குறைக்க இத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரான அசோக் கஜபதி ராஜூ இத்துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் விமான எரிபொருள் மீதான விற்பனை வரியை குறைக்க கடிதம் அனுப்பியுள்ளார்.
விற்பனை வரி
இந்திய சந்தையை பொருத்த வரை சேவை கட்டணத்தில் 40 சதவீத தொகை விமான எரிபொருள்-க்கு மட்டும் இந்திய நிறுவனங்கள் செலவு செய்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசு சுமார் 30 சதவீத வரை விமான எரிபொருள்-க்கு விற்பனை வரி விதிக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகா
இந்திய மாநிலங்களில் கர்நாடக மாநிலம் தான் அதிகளவிலான விற்பனை வரியை விதித்து வருவதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இம்மாநிலம் விமான எரிபொருளின் மீது விற்பனை வரியாக 28 சதவீத தொகையை பெறுகிறது.
புதிய நிறுவனம்
கஜபதி ராஜூ மாநில அரசுகளுக்கு அனுப்பிய கடிதத்தில் மாநில அரசு விமானத்துறைக்கு எதுவாக சலுகைகள் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
சில நாட்களுக்கு முன்பே பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு ஏர் பிகாசஸ் நிறுவனம் துவங்கப்பட்டது.
பிற சேவைகள்
விமானங்களின் பராமரிப்பு, பழுது மற்றும் சீர்திருத் பணிகளுக்கான (MRO) வரியை குறைந்தது 10 வருடமாவது முறைப்படுத்தியும்ஸ குறைக்கவும் மாநில அரசை கஜபதி ராஜூ வலியுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications