பெங்களூரு: ஐரோப்பியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான கேப்ஜெமினி, 3.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐகேட் நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஐகேட் நிறுவனத்தைச் சுனில் வாத்வானி மற்றும் அசோக் திரிவேதி ஆகியோர் இணைந்து 1996ஆம் ஆண்டு அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு துவங்கப்பட்டது. 2014ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 1.27 பில்லியன்டாலராக உயர்ந்ததுள்ளது.
இன்றைய நிலையில் இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 3.6 பில்லியன் டாலராகும். மேலும் ஐகேட் அமெரிக்கப்பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும்.
பங்கு இருப்பு
தற்போது ஐகேட் நிறுவனத்தின் 29 சதவீத பங்குகள் அபக்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனத்திடமும், 25 சதவீத பங்குகள் ஐகேட்நிறுவனத்தின் நிறுவனர்களான சுனில் வாத்வானி மற்றும் அசோக் திரிவேதி ஆகியோரிடம் உள்ளது.
கேப்ஜெமினி நிறுவனம் முதல் கட்டமாக இவ்விரு தரப்பினர்கள் மத்தியில் இருக்கும் 54 சதவீத பங்குகள் கைபற்றவும்,அதன் பின் மீதமுள்ள பங்குதாரர்களிடம் இருக்கும் பங்குகளைக் கைப்பற்றவும் திட்டமிட்டுள்ளது.
பாட்னி கம்பியூட்டர்ஸ்
2011ஆம் ஆண்டு ஐகேட் நிறுவனம், பாட்னி கம்பியூட்டஸ் நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் அபக்ஸ் பார்ட்னர்ஸ்சுமார் 1.2 பல்லியன் டாலர் கடன் அளித்தது. இக்கடன் தொகையை அடுத்தச் சில ஆண்டுகள் பங்குகளாக மாற்றிக்கொண்டதுஅபக்ஸ், இதன் மூலமாகத் தான் இந்நிறுவனம் 29 சதவீத பங்குகளைப் பெற்று நிர்வாகக் குழுவில் இடத்தைப் பிடித்தது.
பிற நிறுவனங்கள்
சந்தையில் நிலவும் தகவல்கள் படி ஐகேட் நிறுவனத்தைக் கைப்பற்ற பிரான்ஸ் Atos மற்றும் பிபிஒ துறையில்முன்னணியாகத் திகழும் ஜென்பாக்ட் ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாகத் தெரிகிறது.
ஆனால் கேப்ஜெமினி இந்த இணைப்புப் பேச்சுவார்த்தையில் கடைசிக் கட்டம் வரை நெருங்கியுள்ளதாகத் தகவல்கள்கிடைத்துள்ளது.
ஐகேட் - கேப்ஜெமினி
இவ்விரு நிறுவனங்கள் இணைவதன் மூலம் கேப்ஜெமினி நிறுவனத்தின் வர்த்தகம் வட அமெரிக்காவில் வலிமை பெறும்,ஐகேட் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 70 சதவீதம் அமெரிக்காவில் இருந்து மட்டுமே கிடைக்கிறது.
பணியாளர்கள்
இன்றைய தேதியில் ஐகேட் நிறுவனத்தில் 33,000 பணியாளர்களும், கேப்ஜெமினி நிறுவனத்தில் 1.41 இலட்ச பணியாளர்கள்பணியாற்றி வருகின்றனர்.
போட்டி
இந்த இணைப்பின் மூலம் கேப்ஜெமினி, இந்திய சந்தையில் அக்சன்ச்சர் மற்றும் ஐபிஎம் நிறுவனங்களுக்குக் கடுமையானபோட்டி அளிக்கும்.
இணைப்புகள்
2008ஆம் ஆண்டு ஹெச்பி நிறுவனம் இசிஎஸ் நிறுவனத்தை 13.9 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது, அதேபோல் சிஜிஐநிறுவனம் பிரட்டனின் லாஜிகா நிறுவனத்தை 2.6 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது.
இந்த வரிசையில் ஐகேட் மற்றும் கேப்ஜெமினி நிறுவனத்தின் இணைப்புச் சந்தையில் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications