டெல்லி: ஈகாமர்ஸ் சந்தையில் முன்னணி நிறுவனங்களான பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேசான், ஜபாங் மற்றும் மைந்திராஆகியவை இந்தியாவில் முறையற்ற வகையில் வர்த்தகம் செய்துவருவதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இக்குற்றச்சாட்டிற்குச் சரியான ஆதாரங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் இந்நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்களைஇந்திய போட்டி ஆணையம் (CCI) நிராகரித்துள்ளது.
இந்திய போட்டி ஆணையம்
இதுக்குறித்து, கடந்த சில மாதங்களாக இந்திய போட்டி ஆணையம், தனிக்குழு ஒன்றை அமைத்துப் பிளிப்கார்ட் இந்தியா,ஜேஸ்பர் இன்போடெக் (ஸ்னாப்டீல்), ஜிரியான் ரீடைல் (ஜபாங்), அமேசான் செல்லர் சர்வீஸ் மற்றும் வெக்டார் ஈகாமர்ஸ்(மைந்திரா) நிறுவனங்களைத் தீவர கண்காணிப்பில் வைத்தது.
கண்காணிப்பு
தற்போது இந்த 5 நிறுவனங்களில் ஆய்வுகள் மற்றும் சோதனைகள் செய்து முடித்த நிலையில், ஈகாமர்ஸ் நிறுவனங்கள்வர்த்தக விதிமுறைகளை எந்த விதித்திலும் மீறவில்லை என இந்திய போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது.
தள்ளுபடிகள்
ஈகாமர்ஸ் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அதிகளவிலான தள்ளுபடிகள் அளிக்கப்படுகிறது. இதனால் சில்லறைவிற்பனையாளர்கள் அதிகளவில் பாதிப்பு அடைவதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
தனி ஒப்பந்தம்
தள்ளுபடி விற்பனைக்காக ஈகாமர்ஸ் நிறுவனங்கள் விற்பனையாளர்களுடன் பிரத்தியேக ஒப்பந்தங்களைச் செய்வதாகப்புகார் செய்யப்பட்டது. ஆனால் அத்தகைய ஒப்பந்தங்கள் ஏதும் செய்யப்படுவதில்லை என இந்திய போட்டி ஆணையம்தெரிவித்துள்ளது.
சூப்பரான வாய்ப்பு
இந்திய போட்டி ஆணையத்தின் இந்த அறிவிப்பு ஈகாமர்ஸ் நிறுவனங்களின் மீதான நம்பிக்கைத் தன்மை அதிகரித்துள்ளது.
பிக் பில்லியன் டே
இந்தப் பிரச்சனை அனைத்தும் பிளிப்கார்ட் நிறுவனம் நடத்திய பிக் பில்லியன் டே தள்ளுபடி விற்பனையின் மூலம்துவங்கியது.