பெங்களூரு: 2015ஆண்டில் குறைந்து வரும் பணவீக்கம், நிலையான பருவநிலைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருப்பதால் இந்திய நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்குச் சுமார் 10.8 சதவீதம் வரை சம்பள உயரும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.
கடந்த சில வருடங்களில் இதுவே அதிளவிலான ஊதிய உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாத சம்பளம் வாங்கும் பணியாளர்கள் அனைவரும் குத்தாட்டம் போட்டும் நிலையில் உள்ளனர்.
டவர் வாட்சன்
சர்வதேச மனிதவள ஆலோசனை நிறுவனமான டவர் வாட்சன் ஆய்வுகளின் படி 2015ஆம் ஆண்டில், இந்திய நிறுவனங்கள் 10.8 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளக்க முடியும் எனக் கணித்துள்ளது.
பிற நாடுகள்
இந்தியாவை ஒப்பிடும்போது ஊதிய உயர்வு அளிப்பதில் சீனா பின்தங்கியுள்ளது.
டவர் வாட்சன் நிறுவன கணிப்புகளின் படி இந்தியா 10.8% இந்தோனேசியா 9.5%, சீனா 8.6%, பிலிப்பைன்ஸ் 6.7%, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் 4.5%, ஆஸ்திரேலியா 3.5%, ஜப்பான் 2.5% வரை உயர்வு அளிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
உண்மையான நிலை என்ன..
10.8 சதவீத ஊதிய உயர்வு எனக் கூறும்போதே மகிழ்ச்சியில் திளைக்கிறோம். உண்மையாக நிறுவனத்தின் நிலை, செலவீணங்கள், உள்நாட்டு மற்றும் மத்திய,மாநில அரசு வரி போன்றவற்றுக்குப் பின் இந்திய நிறுவனங்கள் 3.3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை மட்டும் ஊதிய உயர்வு அளிக்கும்.
பொருளாதாரச் சூழ்நிலை...
எண்ணெய் விலை சரிவு, பணவீக்கத்தில் மிதான சரிவு ஆகிய காரணத்தினால் இந்தியாவில் செலவீனங்கள் குறைந்து வருகிறது. இதனால் பொருளாதாரச் சிறந்த முறையில் வளர எதுவாக அமைந்துள்ளது.
எனவே தான் டவர் வாட்சன் நிறுவனம் இந்திய நிறுவனங்களால் 10.8 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க முடியும் என நம்பப்படுகிறது.
ஆய்வு
கடந்த பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட இந்த ஆய்வில் 19 நாடுகளில் இருந்து 20,000 நிறுவனங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
2015 சூப்பர்...
2013ஆம் ஆண்டில் கணிப்புகளின் படி 10.3%ஆக இருந்தபோது பணவீக்கம் 10 சதவீதமாக இருந்து இதனால் பணியாளர்களுக்கு 0.3% சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு கிடைத்து.
தற்போது இதன் நிலை வேறு, கணிப்புகள் 10.8%, பணவீக்கம் 5.8% எனவே 5 சதவீதம் வரை உயர்வு கிடைக்கும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications