காத்மாண்டு: தொடர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நோபளத்திற்கு உலக வங்கி அமைப்பு மறுசீரமைப்பு பணிகளுக்காக 500 பில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

இத்தொகை நேபாள மக்கள் கண்டுள்ள மிகப்பெரிய இயற்கை சீரழிவில் இருந்து மீண்டுவர பெரிதும் உதவியாக இருக்கும்.
கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 9 000 பேர் இறந்துள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வரை உணவு, உடை, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை உலக நாடுகள் பூர்த்திச் செய்ய உறுதி அளித்துள்ளது. இந்நிலையில் உலக வங்கி அளிக்கும் 500 மில்லியன் டாலர் நிதியுதவி இந்நாட்டின் சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த பெரிதும் உதவும்.
இவ்வறிவிப்பை உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications