மும்பை: இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 100 ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு எண்களை ஏறு வரிசை அளவுகளில் அச்சிடப்பட்டுள்ளதாக ஆர்பிஐ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டில் கள்ள நோட்டுகளின் புழக்கத்தைக் குறைக்கும் வகையில் 2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 100, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெற்று வருகிறது.
ஏறு வரிசையின் எண்கள்
இப்புதிய மாற்றங்களை ரிசர்வ் வங்கி மகாத்மா காந்தி 2005 வரிசை நோட்டுகளில் செய்துள்ளது. மேலும் இப்புதிய ரூபாய் நோட்களின் வெளியீடு கூடிய விரைவில் துவங்கும் எனவும் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
ரூபாய் சின்னம்
இப்புதிய நோட்டுகளில் ரூபாய் நாணயத்திற்கான சின்னம் "₹" முன்பக்கம் பின்பக்கம் ஆகிய இரு பகுதிகளிலும் இடம்பெறும். மேலும் எண் களத்தில் R என்ற எழுத்து அச்சிடப்பட்டு இருக்கும், அதுமட்டும் அல்லாமல் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் அவர்களின் கையெழுத்தும் புதிதாக அச்சிடப்படும் நோட்டுகளில் இடம்பெற்றிருக்கும்.
பிற ரூபாய் நோட்டுகள்
இப்புதிய மாற்றங்கள் பிற ரூபாய் நோட்டுகளிலும் கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் பகுதி திட்டங்களாக நிறைவேற்றப்படும் எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
கள்ள நோட்டுகள்
இப்புதிய முறையின் மூலம் மக்கள் கள்ள நோட்டுகளை எளிமையாகக் கண்டுபிடிக்க முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஏறு வரிசை அளவுகளில் அச்சிடப்பட்டுள்ள எண்கள் மக்களுக்குப் புலப்படும் வகையில் அமைந்துள்ளது.
பாதுகாப்புக் குறிகள்
இந்தியாவில் புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு தன்மையை அதிகரிக்கவும், கள்ளநோட்டுகள் அச்சடிக்க முடியாக வகையில் வடிவமைக்கவும் ஆர்பிஐ மற்றும் மத்திய அரசு இப்பணியில் தீவிரமாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உண்மையாகவா??
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications