மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது முன்னாள் பணியாளர் மீது, நிறுவனத்தின் முக்கிய மற்றும் பாதுகாப்பான தகவல்களைத் திருடியுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
இத்தகவல்கள் நாட்டில் மிகப்பெரிய அளவில் 4ஜி சேவையை விரிவாக்கம் செய்ய உள்ள ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்திற்குக் கைமாற வாய்ப்புள்ளதாக ஏர்டெல் கூறுகிறது.
யாசிர் மஜித்
ஏர்டெல் நிறுவனத்தில் 10 ஆண்டுகாலமாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியாற்றிய யாசிர் மஜித், இந்நிறுவனத்தை விட்டு ஏப்ரல் மாதம் வெளியேறி தற்போது ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனத்தின் இணைந்துள்ளார்.
ஏர்டெல் வழக்கு
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் அளித்துள்ள புகாரில் யாசிர் மஜித் கடந்த ஏப்ரல் மாதம் ஏர்டெல் நிறுவனத்தை விடுத்து ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் அவர் நிறுவன பணியில் இருக்கும்போதும் நிறுவனத்தின் நிதிநிலை, வருமானம், பேஸ்ஸ்டேஷன் தகவல்களைப் பதிவிறக்கம் செய்து அதனை ஈமெயில் செய்துள்ளார். இத்தகவல்களைத் தற்போது தான் இணைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்க வாய்ப்புண்டு, என ஏர்டெல் வழக்குப் பதிவு செய்துள்ளது.
தகவல்கள்
யாசிர் மஜித் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள பேஸ் ஸ்டேஷன் தகவல்களை நிறுவன விதிகளுக்குப் புறம்பாகப் பதிவிறக்கும் செய்துள்ளார். இதில் இப்பகுதியில் ஏர்டெல் பெறும் வருமானம், கதிரியக்கம் போன்ற பல விபரங்கள் உள்ளதாக ஏர்டெல் தெரிவிக்கிறது.
இச்சம்பவத்தை மே 26ஆம் தேதியன்று ஏர்டெல் கண்டுபிடித்துள்ளது.
4ஜி சேவை
இந்தியாவில் ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி சேவையை நிலையாக விரிவாக்கம் செய்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் மிகவும் குறைந்த விலையில் சேவை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதனால் இரு நிறுவனங்களுக்கும் மத்தியில் கடுமையான போட்டி நிலவும் அபாயம் உள்ளது.
வருகிற டிசம்பர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ தனது அதிவேக 4ஜி சேவையைத் துவங்க உள்ளது.
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தகத்தில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களும் சரிவை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications