பெங்களூரு: ஒவர்டைம் வேலை செய்ததற்கான சம்பளத்தை அளிக்கமால் தன்னை மட்டும் அல்லாமல் நிறுவனத்தில் பல ஊழியர்களை ஏமாற்றி வருவதாக, விப்ரோ நிறுவனத்திற்கு எதிராக இந்நிறுவனப் பணியாளர் சூரி பாயலா கலிபோர்னியா நிதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இவ்வழக்கிற்கு ஆதரவாக விப்ரோ நிறுவனத்தின் இந்நாள் மற்றும் முன்னாள் பணியாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
ஆதரவும்.. ஒற்றுமையும்..
இவ்வழக்கை ஏற்று நடத்தும் வழக்கறிஞர் ரிச்சர்ட் கெல்னர் அவர்களுக்கு விப்ரோ நிறுவன பணியாளர்கள் பலர் நேரடியாகவும், போன் மூலமும் ஆதரவு அளிப்பதாகவும், தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
விப்ரோ..
நாளுக்கு நாள் இவ்வழக்கு சூரி பாயலா-வின் பக்கம் வலிமை அடைந்துவருகிறது. இதனால் விப்ரோ தனது அமெரிக்க வர்த்தகம் மற்றும் பணியாளர் நலனில் மிகப்பெரிய பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரிச்சர்ட் கெல்னர்
ஒவர்டைம் வேலை செய்ததற்கான சம்பளத்தை அளிக்கமால் விப்ரோ நிறுவனம் ஏமாற்றி வருவதாகப் பல ஊழியர்கள் போன் மூலம் உறுதி செய்துள்ளனர், மேலும் இது கலிபோர்னியா சட்டத்திற்குப் புறம்பானது என ரிச்சர்ட் கெல்னர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 30
இவ்வழக்கு மார்ச் 30ஆம் தேதி கலிபோர்னியா நிதிமன்றத்தில் சூரி பாயலா தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு நிறுவனத்திற்கு எதிராக இருப்பதால், திடீரெனச் சூரி அவர்களைப் பெங்களூரு அலுவலத்திற்கு விப்ரோ மாற்றியதுள்ளது. தற்போது சூரி பாயலா அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
கலிபோர்னியா அலுவலகம்
விப்ரோ நிறுவனத்தின் கலிபோர்னியா அலுவலகத்தில் சுமார் 2,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் விப்ரோ நிறுவனத்தின் இந்நாள் மற்றும் முன்னாள் பணியாளர்கள் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளனர்.