டெல்லி: மத்திய அரசு நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நித்தின் கட்கரி தெரிவித்தார்.
இந்தியா - இலங்கை
தற்போது இந்தியா - இலங்கை நாடுகள் இடையேயான வர்த்தக இணைப்பை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த 22,000 கோடி ரூபாய் திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி உதவி செய்வதாகவும் ஒப்புதல் அளித்துள்ளது.
நித்தின் கட்கரி
நெடுஞ்சாலை உபகரணக் கூட்டத்தில் கலந்துகொண்ட போக்குவரத்துறை அமைச்சர் நித்தின் கட்கரி கூறுகையில், "மத்திய அரசு செயல்படுத்த உள்ள 6 லட்சம் கோடி திட்டங்களில், 5 லட்சம் கோடி ரூபாய் சாலை போக்குவரத்திற்காகவும், 1 லட்சம் கோடி கப்பல் போக்குவரத்திற்காவும் செலவிடப்பட உள்ளது, இதன் மூலம் இந்தியாவில் அடுத்த 5 வருடத்தில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்." எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு
இதில் ஏற்கனவே மத்திய அரசு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுச் செயல்படுத்த துவங்கியுள்ளது.
அண்டை நாடுகள்
தற்போது மத்திய அரசு அண்டை நாடுகளுடனான வர்த்தக இணைப்புகளை ஏற்படுத்த தலையாயக் கடமையாகக் கொண்டுள்ளது. இதனால் இலங்கை, சீனா, நேபால், வங்காளம் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதில் சில நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications