பெங்களூரு: நாட்டின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் வருகிற செப்டம்பர் மாதம் முதல் முற்றிலும் மொபைல் விற்பனை தளமாக மட்டும் செயல்பட முடிவு செய்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்நிறுவனம் கைபற்றிய நிறுவனங்களில் ஒன்றான மைந்திரா, டெஸ்க்டாப் தளச் சேவை விட்டு வெளியேறி முற்றிலும் மொபைல் விற்பனை தளமாக மாறியது. தற்போது பிளிப்கார்ட் நிறுவனமும் இதே பாணியைப் பின்பற்றுகிறது.

இந்தியாவில் மொபைல் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாகவே விற்பனையை மேலும் எளிமையாக்க நிறுவனம் இம்முறைகளைப் பின்பற்றுகிறது.
மேலும் இம்முடிவைக் குறித்துப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை திட்ட அலுவலர் கூறுகையில், "நிறுவன வாடிக்கையாளர்களில் 70 முதல் 75 சதவீதம் மொபைல் ஆப் மூலமே தங்களது வர்த்தகத்தைச் செய்கின்றனர். எங்கள் மொபைல் ஆப் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பல்வேறு மேம்படுத்தப்பட்ட சேவைகளை அளிப்பதற்காகப் பரிசோதித்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனமும் ஆப்-களில் மட்டுமே விற்பனை செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது.
ஆனால் மைந்திரா நிறுவனம் செயலியில் மட்டுமே இயங்கி வருவதால் அதன் விற்பனையில் 10 சதவீதத்துக்கு மேல் சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனை மைந்திரா அதுவரை உறுதி செய்யவில்லை.
இதுகுறித்துப் பிற இ-காமர்ஸ் நிறுவனங்களின் தலைவர்கள் கூறுகையில், மொபைல் ஆப்-களில் மட்டுமே செயல்படுவது சிறந்த திட்டமாக இருக்காது எனக் கூறுகின்றனர். சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யும் அமேசான், ஈபே, அலிபாபா கூட இதுபோன்ற முடிவுகள் எடுக்கவில்லை.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications