பெங்களூரு: நாட்டின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் வருகிற செப்டம்பர் மாதம் முதல் முற்றிலும் மொபைல் விற்பனை தளமாக மட்டும் செயல்பட முடிவு செய்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்நிறுவனம் கைபற்றிய நிறுவனங்களில் ஒன்றான மைந்திரா, டெஸ்க்டாப் தளச் சேவை விட்டு வெளியேறி முற்றிலும் மொபைல் விற்பனை தளமாக மாறியது. தற்போது பிளிப்கார்ட் நிறுவனமும் இதே பாணியைப் பின்பற்றுகிறது.

இந்தியாவில் மொபைல் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாகவே விற்பனையை மேலும் எளிமையாக்க நிறுவனம் இம்முறைகளைப் பின்பற்றுகிறது.
மேலும் இம்முடிவைக் குறித்துப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை திட்ட அலுவலர் கூறுகையில், "நிறுவன வாடிக்கையாளர்களில் 70 முதல் 75 சதவீதம் மொபைல் ஆப் மூலமே தங்களது வர்த்தகத்தைச் செய்கின்றனர். எங்கள் மொபைல் ஆப் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பல்வேறு மேம்படுத்தப்பட்ட சேவைகளை அளிப்பதற்காகப் பரிசோதித்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனமும் ஆப்-களில் மட்டுமே விற்பனை செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது.
ஆனால் மைந்திரா நிறுவனம் செயலியில் மட்டுமே இயங்கி வருவதால் அதன் விற்பனையில் 10 சதவீதத்துக்கு மேல் சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனை மைந்திரா அதுவரை உறுதி செய்யவில்லை.
இதுகுறித்துப் பிற இ-காமர்ஸ் நிறுவனங்களின் தலைவர்கள் கூறுகையில், மொபைல் ஆப்-களில் மட்டுமே செயல்படுவது சிறந்த திட்டமாக இருக்காது எனக் கூறுகின்றனர். சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யும் அமேசான், ஈபே, அலிபாபா கூட இதுபோன்ற முடிவுகள் எடுக்கவில்லை.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications