டெல்லி: இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஒன்றான நொய்டாவில் ரியல் எஸ்டேட் துறை மந்தமடைந்துள்ளாதாகப் பாங்க் ஆஃப் அமெரிக்கா தனது ஆய்வுகளின் மூலம் தெரிவித்துள்ளது.
தற்போது நொய்டா ரியல் எஸ்டேட் வர்த்தகம் சுமார் 8 வருடம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட்
கடந்த 10 வருடத்தில் இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் நாட்டில் சிறு கிராமங்களில் கூட வீட்டு மனைகளில் விலை பல லட்சங்களை எட்டியுள்ளது.
தற்போது என்ன நிலை..
ரியல் எஸ்டேட் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், முதலீட்டாளர்களுக்கு, இத்துறையின் மீதுள்ள ஆர்வம் அதிகளவில் குறைந்துள்ளது.
பெங்களூரு, சென்னை
இந்தியாவில் பெரு நகரங்களில் கூட வீட்டு மனை விற்பனை மந்தமடைந்துள்ளது. குறிப்பாகப் பெங்களூரு, சென்னை, நொய்டா, புனே ஆகிய பகுதிகளில் பல அப்பார்ட்மென்ட் விற்பனை ஆகாமல் கிடப்பில் உள்ளது.
3,800 வீடுகள் மட்டுமே
ஏப்ரல் - ஜூன் மாத காலகட்டத்தில் நொய்டாவில் வெறும் 3,800 வீடுகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளது. இதனால் நொய்டா ரியல் எஸ்டேட் துறையில் சுமார் 8 வருடம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இக்காலகட்டத்தில் சுமார் 3.7 சதவீத சரிவை சந்தித்துள்ளது நொய்டா.
நிலுவையில் உள்ள வீட்டுமனைக்கள்
இன்றைய நிலைப்படி நொய்டாவில் விற்பனை செய்யாமல் சுமார் 1,00,000 வீட்டு மனைகள் இருப்பதாகப் பாங்க் ஆஃப் அமெரிக்க- மெர்ரில் லிஞ்ச் நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications