திருவனந்தபுரம்: விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் சில விதிமுறைகள் தளர்க்கப்பட்டால், மாநில அரசு நிதியுதவில் பெறும் புதிய விமான நிறுவனத்தைத் துவக்கிக்கொள்வோம் எனக் கேரள அரசு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது.
கேரள மாநில அரசு நிதியுதவியில் ஏர் கேரளா என்னும் புதிய விமான நிறுவனத்தை உருவாக்க மத்திய அரசு இப்பணிகளில் சில தளர்வுகளை அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திட்டம்..
இந்த ஏர் கேரளா நிறுவனம் வளைகுடா நாடுகளை மையமாக வைத்துத் துவங்கப்பட உள்ளது. இதுமட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோயபுத்தூர் ஆகிய பகுதிகளுக்கும் விமானச் சேவை அளிக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
விதிமுறைகள்
தற்போதுள்ள சட்ட திட்டத்தின் படி ஒரு விமான நிறுவனம் சர்வதேச நாடுகளுக்கு விமானச் சேவை அளிக்க வேண்டும் என்றால், உள்நாட்டில் குறைந்தது 5 இடங்களுக்கு விமானச் சேவை மற்றும் நிறுவனத்தில் கட்டுப்பாட்டில் 20 விமானங்கள் இருக்க வேண்டும்.
ஏர் கேரளா
தற்போதைய நிலையில் ஏர் கேரளா இந்த விதிமுறைகளை எட்ட முடியாது. எனவே விதிமுறைகளில் சில தளர்வுகளை அளிக்குமாறு கேரள அரசு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது.
பிபிபி திட்டம்..
கேரள அரசு இத்திட்டத்தைப் பொது மற்றும் தனியார் நிறுவன கூட்டணியில் துவங்க உள்ளது. இதேப்போன்று தான் கொச்சி சர்வதேச விமான நிலையத்தையும் உருவாக்கியது.
வெயிட் அன்ட் ஸி
கேரள அரசின் பரிந்துரையை ஏற்க மத்திய அரசு தயக்கம் காட்டினாலும், கூடிய விரைவில் சாதகமான பதிலை அளிக்கும் எனக் கேரள அரசு நம்புகிறது. அனுமதிக்குக் குறித்துப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.