சென்னை: சர்வதேச நிறுவனம் மற்றும் பொருளாதார ஆய்வு நிறுவனமான போர்ப்ஸ், ஆசியாவில் புகழ்பெற்ற 50 நிறுவனங்களைப் பட்டியலிட்டுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து 10 நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
போர்ப்ஸ் நிறுவனம் கடந்த வாரம் 'ஃபேபுலஸ் 50' என்ற தலைப்பில் ஆசியாவின் சிறந்த 50 நிறுவனங்கள் இடப்பெற்ற பட்டியில் வெளியிட்டது, இதில் டிசிஎஸ் போன்ற நாட்டின் பல முன்னணி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.
இரண்டாவதாக இந்தியா
கடந்த 5 வருடங்களாக இப்பிட்டியலில் அதிக நிறுவனங்கள் இடம்பெற்ற நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இவ்வருடம் சீனாவிற்கு இந்தியா உள்ளது. இப்பட்டியலில் சீனாவின் 25 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹெச்டிஎப்சி வங்கி
போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் ஹெச்டிஎப்சி வங்கி 9 முறை இடம் பிடித்துள்ளது. இதுவரை எந்த நிறுவனமும் 9 முறை இந்தப் பட்டியலில் இடம்பிடித்தது இல்லை என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
இந்திய நிறுவனங்கள்
அரவிந்தோ பார்மா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎப்சி வங்கி, லுபின், மதர்சன் சுமி சிஸ்டம்ஸ், சன் பார்மா, டிசிஎஸ், டெக் மஹிந்திரா மற்றும் டைட்டன் ஆகியவை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் ஆகும்.
டென்சென்ட்
சீன முதலீட்டு நிறுவனமான Tencent இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மதிப்பு 17,6 பில்லியன் டாலராகும்.
தென் கொரியாவை
இந்தியா, சீன நாடுகளுக்குப் பின் தென் கொரியாவை சேர்ந்த 4 நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.
2 நிறுவனங்கள்
மலேசியா, சிங்கப்பூர், தாய் லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா 2 நிறுவனங்கள் இடம்பிடித்திருக்கின்றன.
ஜப்பான்
இந்தோனேசியா, தைவான், மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வெறும் ஒரு நிறுவனம் மட்டும் தான் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.