பெங்களூரு: இந்திய தகவல் தொழில்நுட்ப சந்தையில் அமையாக நிலையான வளர்ச்சியைப் பெற்று வரும் டெக் மஹிந்தியா 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 90 சதவீத லாப உயர்வை பதிவு செய்துள்ளது.
இத்துறை முன்னணி நிறுவனங்களான இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் லாப அளவீடுகளை நிலைநாட்டப் போராடும் நிலையில், டெக் மஹிந்திரா சத்தம் போடாமல் சாதித்துவிட்டது.
90 சதவீத உயர்வு
ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த லாப அளவு சுமார் 90.40 சதவீதம் வரை உயர்ந்து 816.84 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதனால் இந்நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான இன்போசிஸ், டிசிஎஸ் வாயடைத்துப்போனது.
வருவாய்
இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 2.9 சதவீதம் அதிகரித்து 6293.8 கோடி ரூபாயாக உள்ளது.
வாடிக்கையாளர் எண்ணிக்கை
ஜூன் 30ஆம் தேதி முடிவில் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 770 ஆக உள்ளது.
பணியாளர் எண்ணிக்கை
ஜூன் மாத முடிவில் இந்நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை 103,673 ஆக உள்ளது. இந்த 3 மாத காலகட்டத்தில் டெக் மஹிந்திரா நிறுவனத்தில் புதிதாக 392 பணியாளர்கள் இணைந்துள்ளனர்.
டாலர் வருவாய்
2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டின் டாலர் வருவாயைக் கணக்கிடும் போது இந்நிறுவனத்தின் டாலர் வருவாய் 0.5 சதவீதம் அதிகரித்து 989 மில்லியன் டாலராக உள்ளது. டாலர் கணக்கீட்டில் லாப அளவு 40.5 சதவீதம் அதிகரித்து 106 மில்லியன் டாலராக உள்ளது.
வரிக்குப் பின் லாபம்
முதல் காலாண்டில் வரி உட்பட அனைத்துச் செலவீணத்திற்குப் பின் இந்நிறுவனத்தின் லாப அளவு 43 சதவீதம் உயர்ந்து 676 கோடி ரூபாயாக உள்ளது.