ஹாங்காங்: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஹாங்காங் கிளை சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நட வடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஹாங்காங் மத்திய வங்கி 10 லட்சம் டாலர் அபராதம் விதித்தித்துள்ளது.
ஹாங்காங் வங்கித்துறையில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனையைத் தடுக்கும் பொருட்டு 2012-ம் ஆண்டு இதற்கான கடுமையான சட்டதிட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதன் பின் இச்சட்டத்தின் கீழ் முதல் முறையாக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது.
2012 ஏப்ரல் முதல் 2013 நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் வரை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஹாங்காங் கிளை காசோலைகளைக் கையாளும்போது ஹாங்காங் சட்ட விதி முறைகளைப் பின்பற்றவில்லை என ஹாங்காங் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதில் 28 கார்ப்பரேட் வாடிக்கையாளர்களின் காசோலைகளும் அடங்கும்.