டெல்லி: இந்தியாவின் 2வது மிகப்பெரிய மலிவுவிலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், தனது வளைகுடா நாடுகளின் வர்த்தக விரிவாக்கத்திற்கும், இந்திய சந்தையில் உள்ள போட்டிகளைச் சமாளிக்கும் வகையில் பைலட்களுக்கு அதிகளவிலான ஊதிய உயர்வை அளித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானப் போக்குவரத்துச் செயல்பாட்டில் தடைபடாமல் இருக்கப் பைலட்களை நிறுவனத்தில் நிலைத்திருக்கும் வகையில் ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் சுமார் 200 பேருக்கு மாதம் 1.25 லட்சம் ரூபாய் வரை ஊதிய உயர்வு அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் புதிய ஊதிய உயர்வின் மூலம் விமானப் பைலட்களின் சராசரி சம்பளமான 4.5 லட்ச ரூபாயில் இருந்து 5.45 லட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இதனால் சந்தையின் சராசரி விமானப் பைலட்களின் சம்பளமும் 5.5 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது.
எதிஹாத் மற்றும் கத்தார் ஏர்வேஸ்
கடந்த ஆறு மாத்தில் வளைகுடா விமான நிறுவனங்களான எதிஹாத் மற்றும் கத்தார் ஏர்வேஸ், இந்திய நிறுவனங்களில் இருந்து சுமார் 100 உயர் நிலை பைலட்களைத் தன் நிறுவனத்துடன் இணைத்துள்ளது.
இண்டிகோ
விளைகுடா நாட்டு நிறுவனங்களின் தாக்கத்தைக் குறைக்கவும், இந்நாட்டுச் சந்தை வர்த்தகத்தைக் கைப்பற்றவும், இண்டிகோ நிறுவனம் சுமார் 13 சதவீத ஊதிய உயர்வை (சுமார் 1 லட்சம் ரூபாய்/ மாதம்) அளித்துள்ளது.
பங்குச்சந்தை
மேலும் இண்டிகோ நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி இன்று அனுமதி அளித்துள்ளது.
சீனா மட்டுமல்ல..
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..