டெல்லி: சில வருடங்களுக்கு முன்பு இந்தியா மற்றும் உலக நாடுகளில் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்களை விற்பனை செய்ய டாடா குழுமம் முழுமையான உரிமம் பெற்றது. இதன் பின் இந்நிறுவன விற்பனையில் டாடா புதிய சாதனையைப் படைத்தது.
இதன் காரணமாக டாடா குழுமம் அதிகளவிலான லாபத்தைச் சந்தித்தது குறிப்பிடதக்கது. ஆனால் கடந்த சில மாதங்களாகச் சீன பொருளாதாரச் சரிவில் உலக நாடகளில் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்களின் விற்பனை மந்தமடைந்தது.
விற்பனையில் புதிய உச்சம்..
பல புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகளின் மூலம் செப்டம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜாகுவார் விற்பனையில் 61 சதவீதமும், லேண்ட் ரோவர் விற்பனையில் 88.5 சதவீத உயர்வை பதிவு செய்து ஆட்டோமொபைல் சந்தையை அதிர வைத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்
இதன் எதிரொலியாகத் திங்கட்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சுமார் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் சுமார் 8.4 சதவீதம் வரை உயர்வை சந்தித்துள்ளது.
செப்டம்பர் மாத விற்பனை
இக்காலக்கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 6,850 ஜாகுவார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடும் போது இதன் அளவு 61 சதவீதம் அதிகமாகும். அதேபோல் லேண்ட் ரோவர் கார்களின் விற்பனை 88.5 சதவீதம் உயர்ந்து 5,855 கார்களை விற்பனை செய்துள்ளது.
அமெரிக்கச் சந்தை
செப்டம்பர் மாதத்தில் JLR என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அமெரிக்கச் சந்தையில் அதிகளவிலான வரவேற்பு கிடைத்தது.
அமெரிக்காவை போல் பிரட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்நிறுவனத்தின் விற்பனை கலைகட்டி வரும் நிலையில், சீனாவில் மட்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மட்டும் சுமார் 34 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..