பெங்களூரு: ஸ்வீடன் நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான வால்வோ நிறுவனத்தின் ஐடி வர்த்தகத்தை எச்சிஎல் நிறுவனம் முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.
அடுத்த 5 வருடத்திற்கான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 138 மில்லின் டாலர் என எச்சிஎல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இரு நிறுவனங்களுக்கு மத்தியிலான இந்த ஒப்பந்தத்தின் மூலம் வால்வோ நிறுவனத்திற்கான ஐடி இன்ஃபராஸ்டக்சர், மெயின்பிரேம் மற்றும் அப்பிளிகேஷன் ஆப்ரேஷன் சேவைகளை இனி எச்சிஎல் நிறுவனம் வழங்க உள்ளது.
கடந்த 12 மாதத்தில் வால்வோ நிறுவனத்தின் இப்பிரிவின் மூலம் சுமார் 190 மில்லியன் டாலர் வர்த்தகத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. வால்வோ நிறுவனம் தனது நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல் பிற வாடிக்கையாளர்களுக்கு ஐடி சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த இணைப்பின் மூலம் வால்வோ நிறுவனத்தின் ஐடி பிரிவில் பணியாற்றும் 2,600 ஊழியர்கள் இனி எச்சிஎல் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளனர்.
இதில் சிலருக்கு வேலைப் பறிபோகும் அபாயமும் உள்ளதால் வால்வோ நிறுவன ஊழியர்கள் பீதியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications