டெல்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மிகப்பெரிய நிதி நெருக்கிடியில் சிக்கித் தவித்துக்கொண்டு இருக்கும் போது, பிளாஷ் சேல் என்ற தள்ளுபடி விற்பனையின் மூலம் நிறுவனத்தின் வர்த்தகத்தைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்ற தலைமை செயல் ஆதிகாரி சஞ்சீவ் கபூர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் சஞ்சீவ் கபூர் டாடா - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டணியில் உருவான விஸ்தாரா நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இணைந்துள்ளார்.
சனி, சனிக்கிழமையுடன் முடிந்தது...
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நிர்வாகம் கலாநிதி மாறனிடம் இருந்து அஜய் சிங்கிற்கு மாறிய நிலையில், சஞ்சீவ் கபூர் நிறுவனத்தில் பல இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்தித்தார்.
தற்போது விஸ்தாரா நிறுவனம் இவருக்கான நியமன ஆணையை வழங்கியதன் பேரில் வருகிற சனிக்கிழமையுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை விட்டு வெளியேற உள்ளார்.
சஞ்சீவ் கபூர்
கடந்த நவம்பர் 1,2013ஆம் ஆண்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் சஞ்சீவ் கபூர் (48) 3 வருட ஒப்பந்த முறையில் நிறுவனத்தில் இணைந்தார்.
அதற்கு முன் பங்களாதேஷ் நாட்டின் ஜிஎம்ஜி ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், பேயின் என்னும் ஏர்லைன்ஸ் கன்சல்டன்சி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
நியமனம் மற்றும் வெளியேற்றம்..
சஞ்சீவ் கபூர் அவர்களின் விஸ்தார நிறுவனத்தின் நியமனம் குறித்தும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றம் பற்றி இருநிறுவனங்களும் எவ்விதமான பதில்களும் அளிக்கவில்லை.
பங்குச்சந்தை
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 3.94 சதவீதம் வரை உயர்ந்து 44.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஐபிஓ
மேலும் பங்குச்சந்தையில் பட்டியலிட இந்திய விமான நிறுவனங்கள் ஆர்வமுடன் செயல்படுகிறது. இண்டிகோ நிறுவனத்தைத் தொடர்ந்து தற்போது வாடியா குழுமத்தின் கோஏர் நிறுவனமும் சந்தையில் இறங்கத் திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications