மும்பை: அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளைக் கனடா பென்ஷன் பண்ட் நிறுவன கைப்பற்றியுள்ளது.
ரிலையன்ஸ் இன்பரா நிறுவனம் ஒப்புதல் அளித்த 49 சதவீத பங்கு விற்பனையின் மூலம் இந்நிறுவனம் சுமார் 15,000 கோடி ரூபாய் முதலீட்டைப் பெறுகிறது. மேலும் நிர்வாகக் கட்டுப்பாடுகள் முழுவதும் 51 சதவீத பங்கு இருப்புடன் ரிலையன்ஸ் இன்பரா வசம் உள்ளது குறிப்பிதக்கது.
ரிலையன்ஸ் இன்பரா
மும்பையில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோக நிறுவனமான ரிலையன்ஸ் இன்பரா-வின் 49 சதவீத பங்குகளை 417 ரூபாய் என்ற விலையில் சுமார் 15,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து புதிய முதலீட்டைப் பெறுகிறது.
கனடா பென்ஷன் பண்ட்
கனடா நாட்டின் பொதுத்துறை பென்ஷன் முதலீட்டு நிறுவனமான கூட்டமைப்பின் (Public Sector Pension Investment Board) கிளைகளில் ஒன்றான இந்தக் கனடா பென்ஷன் பண்ட் நிறுவனம் சுமார் 112 பில்லியன் கடனா டாலர் சொத்துக்களைக் கையாண்டு வருகிறது. இந்நாட்டின் மிகப்பெரிய பென்ஷன் பண்ட் நிறுவனங்களில் மிக முக்கியமானவை இது.
கடன் அளவுகள்
தற்போதைய நிலையில் ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்தின் மொத்த கடன் அளவுகள் 16,000 கோடி ரூபாய்.
இப்புதிய முதலீட்டின் மூலம் இந்நிறுவனத்தின் கடன் அளவுகள் 5,000 கோடி ரூபாயாகக் குறைக்கப்படும் என ரிலையன்ஸ் இன்பரா தெரிவித்துள்ளது.
30 லட்சம் வாடிக்கையாளர்கள்
மும்பையைத் தலையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டு 1800 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
7,700 கோடி வருவாய்
2014-15ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 7,700 கோடி ரூபாயாக இருந்தது. மேலும் நாட்டில் மின்சாரத் தேவை மற்றும் அதன் உற்பத்தி அதிகரித்துள்ளதால் இனி வரும் காலங்களில் இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப அளவீடுகள் கண்டிப்பாக உயரும்.
பிப்பாப் டிபென்ஸ்
மேலும் இன்று காலை மும்பை பங்குச்சந்தைக்கு ரிலையன்ஸ் இன்பரா நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையில், பிப்பாப் டிபென்ஸ் நிறுவனத்தில் கூடுதலாக 26 சதவீத பங்குகளை வருகிற டிசம்பர் 2ஆம் தேதி கைப்பற்ற உள்ளதாக அறிவித்தது. இதன் மதிப்பு 1,263 கோடி ரூபாயாகும்.
ரிலையன்ஸ் இன்பரா பங்கு மதிப்பு
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications