டெல்லி: கோல் இந்தியா நிறுவனப் பங்கு விற்பனை முதல் கருப்பு உற்பத்தியாளர்களுக்கு அளிக்கப்படும் மானியங்களை வரை சுமார் 10,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அதிரடி நடவடிக்கையாக மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
கோல் இந்தியா
மத்திய அரசு பங்கு விற்பனை திட்டத்தின் கீழ், நாட்டின் வளர்ச்சி பணிகளுக்காக நிதி திரட்டும் நோக்கத்தில் கோல் இந்தியா நிறுவனத்தின் 10% பங்கு இருப்பைக் குறைத்துக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கூடிய விரைவில் மத்திய அரசு கோல் இந்தியா நிறுவனப் பங்குகளுக்காக விற்பனையை அறிவிக்கும்.
ஏற்றுமதி
இந்தியாவில் ஏற்றுமதிகளை அதிகரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு அளிக்கப்படும் கடனின் 3 சதவீத வட்டியை உயர்த்தப்பட்டால் மேலும் 3 வருடங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கொச்சின் ஷிப்யார்டு
கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் பட்டியலிட மத்திய அரசு பல மாதங்களுக்குப் பின் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
சாலை மேம்பாட்டுத் திட்டங்கள்
சாலை போக்குவரத்துத் துறையில் கிடப்பில் போடப்பட்ட 34 திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தவும் அதற்கான பணிகளை உடனடியாகத் துவங்கவும் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே துறை
இந்திய ரயில்வே துறை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல திட்டங்களுக்கு ரயில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு முன்னிலையில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கருப்பு விவசாயிகள்
முதல் முறையாகக் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குத் தங்களது மானிய தொகையை நேரடியாக அளிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான வழிமுறையைக் கூடிய விரைவில் கண்டறிந்து செயல்படுத்துமாறு மத்திய அரசு இத்துறை அதிகாரிகளைத் தெகிவித்துள்ளது.
ரூ.10,000 கோடி
புதன்கிழமை மட்டும் மத்திய அரசு நாட்டின் வளர்ச்சிகான 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.