மும்பை: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் 2009ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈட்டுப்பட்டு உள்ளனர்.
சிறந்த ஓய்வூதிய பலன்கள், முக்கிய மாற்றங்கள் மற்றும் வங்கி- சந்தைகளுக்கு மத்தியில் உள்ள குழப்பம் ஆகியவற்றை அரசு முறையாகவும், விரைவாகவும் தீர்க்க இன்று ரிசர்வ் வங்கியைச் சேர்ந்து சுமார் 17,000 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஆர்பிஐ ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் இன்றைய வங்கி வர்த்தகத்தில் காசோலை பரிமாற்றாம் மற்றும் நாணய பரிமாற்றங்கள் சேவை அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கியின் அதிகாரங்களை மத்திய அரசு குறைப்பதையும், கடன் மேம்பாட்டுச் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்குதல் ஆகியவற்றை எதிர்த்து ஆர்பிஐ உடன் மேலும் நான்கு அமைப்பு இப்போராட்டத்தில் குதித்துள்ளது.
கடந்த 6 வருடத்தில் முதல் முறையாக ரிசர்வ் வங்கி போராட்டத்தில் இறங்கியுள்ளதால் மத்திய அரசு ஆர்பஐ ஊழியர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும் எனவும் நம்பப்படுகிறது.
அதுமட்டும் அல்லாமல் இந்தப் போராட்டத்திற்கு ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் முழுமையான ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications


