மும்பை: இந்திய வங்கி அமைப்பில் ரிசர்வ் வங்கியின் உரிமத்துடன் NBFC எனப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
வங்கி அமைப்பில் தொடர்ந்து அதிகரித்து வரும் மோசடிகள் மற்றும் குற்றங்களைத் தடுக்க ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுத்த வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாட்டில் பெரிய அளவில் இயங்கதாக நிதி நிறுவனங்களையும், ஒழுங்குமுறை விதிகளை மீறிய சுமார் 56 NBFC நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்துள்ளது ஆர்பிஐ.
இதில் சில நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் அறிவுரைகளை ஏற்றுத் தாமாகவே முன்வந்து உரிமத்தை ரத்து செய்துள்ளனர்.
உரிமம் ரத்து
இந்த உரிமம் ரத்து மூலம் நிறுவனங்கள் தங்களின் சொத்துகளை வேறு எந்த ஒரு நிறுவனத்திற்கும் மாற்றம் செய்ய இயலாது. நாட்டின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளையான பஜாஜ் பின்சர்வ் ரிசர்வ் வங்கி கட்டளையின் படி தங்களது NBFC உரிமத்தைத் திருப்பி அளித்துள்ளது.
பஜாஜ் பின்சர்வ்
இதன் மூலம் இனி பஜாஜ் பின்சர்வ் வெறும் டெப்பாசிட் பெறும் நிறுவனமாக மட்டுமே இயங்கும். எனவே மக்கள் இத்தகைய நிறுவனங்களில் ஒருமுறைக்குப் பல முறை யோசித்து முதலீடு செய்யவும்.
கொல்கத்தா நிறுவனங்கள்
ரிசர்வ் வங்கி இன்று அறிவித்த 56 உரிமம் ரத்துகளில், 16 நிதி நிறுவனங்கள் கொல்கத்தாவில் இருந்தும், 10 நிறுவனங்கள் மும்பையில் இருந்து துவங்கப்பட்டவை.
பிரபலமானவை
இதில் வாபி இன்வெஸ்ட்மென்ஸ், க்ரோடன் டிரேடிங் பிரைவேட், சீயர்ஸ் செக்கூரிட்டி அண்ட் இன்வெஸ்ட்மென்ஸ், பியூச்சர் வென்சர்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் பிரபலமானவை.
சாரதா குழுமம்
கொல்கத்தாவில் நிகழ்ந்த சாரதா குழுமம் நிறுவனங்களின் மோசடிகளுக்குப் பின் ரிசர்வ் வங்கி, வங்கி அமைப்புகளில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்த துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications