டெல்லி: இந்திய வங்கித்துறையில் முக்கியப் பொதுத்துறை வங்கியாகத் திகழும் ஐடிபிஐ வங்கியில் அளித்த ரூ.900 கோடி கடன் மோசடி தொடர்பாக யுபி குழுமத்தின் தலைவர் விஜய் மல்லையாவிடம் வெள்ளிக்கிழமை, வங்கி அதிகாரிகளுடன் சிபிஐ விசாரணை நடத்தியது.

ஐடிபிஐ வங்கி, விஜய் மல்லையா தலைமை வகிக்கும் கிங்பிஷர் நிறுவனத்திற்குக் கடன் வரம்பை மீறியும், விதிமுறைகளை மீறியும் கடன் கொடுத்துள்ளது. இதனை எதிர்த்து விஜய் மல்லையா மற்றும் கிங்பஷர் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி ரகுநந்தன் மற்றும் ஐடிபிஐ வங்கியின் சில முக்கிய வங்கி அதிகாரிகளின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கிங்பிஷர் விமான நிறுவன பெயரில் கொடுத்துள்ள சுமார் 7,000 கோடி ரூபாய் கடனில் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருக்கும் போது, வரம்பை மீறியும், விதிமுறைகளுக்கும் மீறி ஐடிபிஐ வங்கிக் கடன் கொடுத்திருக்கிறது.

முதல் முறையாக இவ்வங்கியின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் இந்த வழக்கு மற்றும் விசாரணை வங்கி, மல்லையா மற்றும் சிபஐ தரப்புகளுக்கு மட்டும் நடுவில் இருக்கட்டும் என வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இக்கடனில் நிபுணர் குழு கடன் அளிக்க வேண்டாம் என அறிவுறுத்தி கிங்பிஷர் விமான நிறுவனத்துக்குக் கடனை நீட்டித்ததற்கான காரணத்தை வங்கி அதிகாரிகள் விளக்க வேண்டும் எனச் சிபிஐ கோரியுள்ளது.
2013ஆம் ஆண்டில் மட்டும் பல்வேறு பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் தொடர்பாகக் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது சுமார் 27 வழக்குகளைச் சிபிஐ பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications