டெல்லி: இந்திய வங்கித்துறையில் முக்கியப் பொதுத்துறை வங்கியாகத் திகழும் ஐடிபிஐ வங்கியில் அளித்த ரூ.900 கோடி கடன் மோசடி தொடர்பாக யுபி குழுமத்தின் தலைவர் விஜய் மல்லையாவிடம் வெள்ளிக்கிழமை, வங்கி அதிகாரிகளுடன் சிபிஐ விசாரணை நடத்தியது.

ஐடிபிஐ வங்கி, விஜய் மல்லையா தலைமை வகிக்கும் கிங்பிஷர் நிறுவனத்திற்குக் கடன் வரம்பை மீறியும், விதிமுறைகளை மீறியும் கடன் கொடுத்துள்ளது. இதனை எதிர்த்து விஜய் மல்லையா மற்றும் கிங்பஷர் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி ரகுநந்தன் மற்றும் ஐடிபிஐ வங்கியின் சில முக்கிய வங்கி அதிகாரிகளின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கிங்பிஷர் விமான நிறுவன பெயரில் கொடுத்துள்ள சுமார் 7,000 கோடி ரூபாய் கடனில் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருக்கும் போது, வரம்பை மீறியும், விதிமுறைகளுக்கும் மீறி ஐடிபிஐ வங்கிக் கடன் கொடுத்திருக்கிறது.

முதல் முறையாக இவ்வங்கியின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் இந்த வழக்கு மற்றும் விசாரணை வங்கி, மல்லையா மற்றும் சிபஐ தரப்புகளுக்கு மட்டும் நடுவில் இருக்கட்டும் என வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இக்கடனில் நிபுணர் குழு கடன் அளிக்க வேண்டாம் என அறிவுறுத்தி கிங்பிஷர் விமான நிறுவனத்துக்குக் கடனை நீட்டித்ததற்கான காரணத்தை வங்கி அதிகாரிகள் விளக்க வேண்டும் எனச் சிபிஐ கோரியுள்ளது.
2013ஆம் ஆண்டில் மட்டும் பல்வேறு பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் தொடர்பாகக் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது சுமார் 27 வழக்குகளைச் சிபிஐ பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications