டெல்லி: நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க இந்திய எல்லைக்குள் வரும் எதிரி நாட்டு விமானங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை 400 கிலோமீட்டர் தொலைவிலேயே கண்டுபிடித்துத் தகர்த்து வீழ்த்தும் 5 ரஷ்ய எஸ்-400 டிரைம்ப் ஏர் டிபென்ஸ் ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த 5 ஏவுகணைகளின் மொத்த மதிப்பு 39,000 கோடி ரூபாய் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மோடி - புடின் சந்திப்பு
பாதுகாப்பு கையகப்படுத்தும் குழுவின் தலைவரான மனோகர் பாரிக்கர் ஏவுகணைகளை வாங்க முடிவு செய்து அதற்கான ஒப்புதல் பெற்றாலும், முறையான திட்டம் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரின் சந்திப்பில் நடக்கும் எனத் தெரிகிறது.
அதற்கு முன் விலை பேரம் (வணிகப் பேச்சுவார்த்தைகள்) செய்யவே மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் - சீனா
இந்த 5 ஏவுகணைகளில் 3 பாகிஸ்தான் எல்லையிலும், 2 சீன எல்லை பகுதியிலும் நிறுவன இந்திய பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.
வான்வழி பாதுகாப்பு
இந்திய பாதுகாப்புத்துறை தரை மார்க்கமாக வரும் பாதிப்புகள் மற்றும் எதிர்ப்புகளை எதிர்கொள்ளத் தக்க வகையில் தயாராகி வரும் நிலையில் வான்வழித் தாக்குதல்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய போர் விமானம் மற்றும் ஏவுகணைகளை வாங்கி வருகிறது.
மேலும் இப்பாதுகாப்பு இந்தியாவில் உள்ள அணுஉலைகளையும் பாதுகாக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. உலகளவில் இந்த எஸ்-400 ரக ஏவுகணைகளுக்கு 2வது மிகப்பெரிய வாடிக்கையாளர் என்றால் அது இந்தியா தான்.
சீனா
இந்தியாவிற்கு எல்லை ஓரத்தில் அவ்வப்போது பிரச்சனைகளை அளித்து வரும் சீனாவிடம் 6 எஸ்-400 ஏவுகணைகளை வைத்துள்ளது. வருகிற 2017ஆம் ஆண்டு முதல் 6 எஸ்-400 பேட்டரிகள் டெலிவரி செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
அணு சக்தி கொண்ட நீர்மூழ்கி கப்பல்கள்
இந்தியா தனது கடற்படையை வலிமைப்படுத்த 1.5 பில்லியன் டாலர் குத்தகை திட்டத்தில் அணு சக்தி கொண்ட நீர்மூழ்கி கப்பல் ஒன்றை ரஷ்யாவிடம் இருந்து பெற்றுள்ளது.
அதேபோல் அகுலா-II மற்றும் கிருஸ்டென்ட் ஐஎன்எஸ் சக்கரா ஆகிய இரு நீர்மூழ்கி கப்பல்களை 10 வருட ஒப்பந்த முறையில் வைத்துள்ளது.
இந்தியா-ரஷ்யா
இதுவரை இந்தியா ரஷ்யா உடன் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான 272 சுகோய் 30எம்கேஐ விமானங்களையும், 2.33 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐஎன்எஸ் விக்கிரமாதித்தியா போர்க் கப்பலை பெற்றுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications