ஏடிஎம் கட்டணத்தை எப்படி எல்லாம் தவிர்க்கலாம்?

சென்னை: ஏடிஎம் மையங்களில் ஒரு மாதத்தில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கும் வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

ஏடிஎம் மையங்களில் ஒரு மாதத்தில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் பிடிக்கப்படும். இந்த விதிமுறை டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய பெரு நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களோ அந்த வங்கியின் ஏடிஎம் மையத்தில் மாதம் 5 முறையும், பிற வங்கிகளின் ஏடிஎம் மையத்தில் மாதம் 3 முறையும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்.

இந்நிலையில் ஏடிஎம் மைய கட்டணத்தை தவிர்க்கும் வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

பெரிய தொகை

பெரிய தொகை

வீட்டு செலவுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று உங்களுக்கு தெரியும். அதனால் மாத செலவுக்கு எவ்வளவு பணம் தேவையோ அதை ஒன்று அல்லது இரண்டு தவணையில் ஏடிஎம்மில் எடுத்து வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

இன்டர்நெட் பேங்கிங்

இன்டர்நெட் பேங்கிங்

இன்டர்நெட் பேங்கிங் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது அல்லது செக்புக் கோருவது ஆகியவற்றை செய்யுங்கள். இதை ஏடிஎம் மையத்தில் செய்ய வேண்டாம்.

ஏடிஎம்

ஏடிஎம்

முடிந்த வரை பிற வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களை பயன்படுத்துவதை தவிர்க்கப் பாருங்கள்.

கார்டுகள்

கார்டுகள்

பணம் கொடுத்து பொருட்கள் வாங்குவதை தவிர்க்கலாம். பணத்திற்கு பதில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+