டோக்கியோ: ஜப்பானின் பொருளாதார வளர்ச்சிக்காக அந்நாட்டு மத்திய வங்கி அதிரடியாக "எதிர்மறை வட்டி விகிதத்தை" இன்று அறிவித்தது. இது சர்வதேச பங்குச் சந்தைகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடுகளின் மத்திய வங்கிகளுக்கு "வட்டி விகிதம்" என்கிற கொள்கை உண்டு. இதனடிப்படையில் நாட்டின் மற்ற வங்கிகளுக்கு மத்திய வங்கி கடன் வழங்கும்.
இந்தியாவில் இது ரெப்போ ரேட் எனப்படும். இந்த வட்டி விகிதத்தை 0.1% என நடைமுறைப்படுத்துவதாக ஜப்பான் மத்திய வங்கி இன்று அறிவித்துள்ளது. 0%-க்கு கீழே வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இது எதிர்மறை வட்டி வகிதமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ஜப்பானின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல இது உதவும் என்ற அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் ஜப்பானின் இந்த அறிவிப்பால் பங்குச் சந்தைகள் நல்ல உயர்வை எதிர்கொண்டுள்ளது. ஜப்பான் பங்கு சந்தை 2.8% உயர்வைக் கண்டது. சீனாவின் ஷாங்காய் பங்கு சந்தை 3.1% உயர்ந்தது. இந்தியாவின் மும்பை பங்குச் சந்தையும் 300க்கும் அதிகமான புள்ளிகள் உயர்ந்த நிலையில் காணப்பட்டது.