பெங்களூரு: மத்திய அரசு பிஎப் கணக்கில் உள்ள பணத்தைத் திரும்பப்பெற விதித்த புதிய விதிமுறைகளை எதிர்த்து நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இன்று பெங்களுரின் முக்கியப் பகுதியான சில்க் போர்டில், கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. பேருந்துகள் தீக்கிரையாக்கின. தமிழகம் செல்லும் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
பிஎப் கணக்காளர்களின் போராட்டத்தையும், கலவரத்தையும் பெங்களூரு போரலீசார் சில மணி நேரப் போராட்டத்திற்குப் பின் முழுமையாகக் களைத்தனர்.
EPFO அமைப்பு
இந்நிலையில் மத்திய அரசின் ஓய்வூதிய அமைப்பான EPFO அமைப்பு பிஎப் கணக்காளர்களின் கடுமையான எதிர்ப்புகளைக் கண்டு பிஎப் கணக்கின் மீது விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளின் அமலாக்கத்தை ஆகஸ்ட் 1 வரை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
3 மாதம்
ஆகஸ்ட் 1 வரை பழைய விதிமுறைகளின் படியே ஊழியர்கள் தங்கள் பிஎப் கணக்கில் உள்ள பணத்தை முழுமையாக எடுத்தக்கொள்ளலாம் எனவும் EPFO அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறைகள்
மத்திய அரசு அறிவித்த புதிய விதிமுறையின் படி, பிஎப் கணக்கில் வைப்பு வைக்கப்பட்டுள்ள தொகையைக் கணக்காளர்கள் முழுமையாகத் திரும்பப்பெற முடியாது.
ஏப்ரல் 30
ஈபிஎப்ஓ அமைப்பின் முந்தைய அறிவிப்பின் படி, ஏப்ரல் 30ஆம் தேதிக்குப் பின் பிஎப் கணக்காளர்கள் ஒரு தனது பிஎப் கணக்கில் உள்ள தொகையை முழுமையாகத் திரும்பப்பெற நினைத்தால் மத்திய அரசு அனுமதிக்காது. ஒரு பகுதி தொகையை மட்டுமே பெறும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது.
அதற்கும் பல விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் உள்ளது.
2 மாதம் காலம்
ஏப்ரல் 30ஆம் தேதிக்குப் பின் உங்கள் பிஎப் கணக்கில் உள்ள பணத்தைப் பெற, நீங்கள் குறைந்தது 2 மாதம் அல்லது அதற்கு மேல் வேலை இல்லாமல் இருந்திருக்க வேண்டும், அப்படியானால் உங்கள் கணக்கில் நிறுவனம் வைப்பு வைக்கப்பட்ட தொகை மற்றும் அதற்கான வட்டி தொகையை மட்டுமே மத்திய அரசு அளிக்கும்.
ஊழியர் மூலம் பிஎப் கணக்கில் வைப்பு வைக்கப்பட்ட தொகை மற்றும் அதற்கான வட்டியை 58 வயதுக்குப் பின்னரே அரசு உங்களுக்கு அளிக்கும்.
ஒத்திவைப்பு
தற்போது இந்தப் புதிய விதிமுறை அமலாக்கத்தை ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் தங்களது பிஎப் கணக்கில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால் அடுத்த 3 மாதத்திற்குள் எடுத்துக்கொள்ளவும். இல்லையெனில் 58 வயது வரை காத்திருக்கவும்.
ஆகஸ்ட் 1
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications