மும்பை: நாட்டின் முன்னணி ஆன்லைன் சில்லறை விற்பனை (ஈகாமர்ஸ்) நிறுவனமான ஸ்னாப்டீல், கடந்த சில மாதங்களாக முக்கியமான நகரங்களை மையப்படுத்தி விற்பனை செய்வதை விடுத்து, இந்திய கிராமம் மற்றும் டவுன் பகுதிகளை மையப்படுத்தி அதிகளவிலான புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று, தனது முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளது.
இந்நிலையில் ஸ்னாப்டீல், தற்போது ஹவுசிங்.காம் என்னும் ஆன்லைன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றும் முடிவோடு, இந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஸ்னாப்டீல்
கடந்த டிசம்பர் மாதம் முதல் ஹவுசிங்.காம் நிறுவனத்தைக் கைப்பற்ற ஸ்னாப்டீல் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அடுத்தச் சில மாதங்களில் இந்த டீல் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் இந்த டீல் 50- 100 மில்லியன் டாலர் மதிப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள்
சாப்ட்பாங்க், நெக்சஸ் வென்சர் பார்ட்னர்ஸ் போன்ற முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் ஸ்னாப்டீல் மற்றும் ஹவுசிங்.காம் ஆகிய இரு நிறுவனங்களிலும் முதலீடு செய்து வருவதால், இந்த டீல் எளிமையான முறையில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழப்பம்..
இந்த டீல் குறித்து விபரம் அறிந்த சில அதிகாரிகளைக் கேட்டபோது, ஸ்னாப்டீல் நிறுவனம் ஹவுசிங்.காம் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளை மட்டுமே கைப்பற்றும் எனவும், சிலர் ஹவுசிங்.காம் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றவே பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் ரியல் எஸ்டேட்
இன்றைய நிலையில் ஆன்லைன் ரியல் எஸ்டேட் துறையில் 99ஏக்கர்ஸ், மேஜிக்பிரிக்ஸ்.காம் ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதேபோல் புதிதாகக் களமிறங்கியுள்ள குவிக்கர் மற்றும் ஓஎல்எக்ஸ் ஆகியவை வர்த்தகத்தைப் பெற போராடி வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில் அதிகளவிலான ஆன்லைன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள ஸ்னாப்டீல், ஹவுசிங்.காம் நிறுவனத்தின் மூலம் இச்சந்தையில் இறங்குகிறது.
டாடா ஹவுசிங்
கடந்த 2014ஆம் ஆண்டுப் பிளாட் மற்றும் அப்பார்ட்மென்ட் விற்பனைக்காக ஸ்னாப்டீல் டாடா ஹவுசிங் நிறுவனத்துடன் கூட்டணி வைத்தது. இந்த முயற்சி அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு மாறுபட்டதாக இருந்தது.
மேலும் இம்முயற்சிக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.
ஹவுசிங்.காம்
2012ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட ஹவுசிங்.காம், கடந்த 12-18 மாதங்களாக நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் எதிரொலியாக ஹவுசிங்.காம் நிறுவனத்தில் இருந்து இதன் அஸ்தான நிறுவனர் ராகுல் யாதவ் வெளியேறினார்.
சபதம்.. பணி நீக்கம்..
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications