டெல்லி: 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் ஊழல் மற்றும் லஞ்சம் குறித்த புகார்கள் 50 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் 2015ஆம் நிதியாண்டில் ஊழல் மற்றும் லஞ்சம் குறித்து 29,838 புகார்களைப் பெற்றுள்ளது, கடந்த நிதியாண்டில் இதன் எண்ணிக்கை 62,363 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. புகார்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வித்தியாசத்தைக் கணக்கில் கொண்டு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்தியாவில் ஊழல் குற்றங்கள் 52 சதவீதம் வரை குறைந்துள்ளதாகக் கூறினார்.
ஆனால் இந்தத் திடீர் குறைவிற்கான காரணத்தைப் பார்க்கும் போது, 2014ஆம் ஆண்டில் ஒரு குற்றத்திற்குப் பல புகார்கள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால் 2015ஆம் ஆண்டில் 29,838 புகார் குற்றங்களைத் தணிக்கை செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என மத்திய மாநில பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.