டெல்லி: ரிசர்வ் வங்கியின் கவனரான ரகுராம் ராஜனின் 3 வருடப் பணிக்காலம் வருகிற செப்டம்பர் மாதம் முடிவடைகிறது.
பிரதமர் மோடி அனைவரின் எதிர்ப்புகளையும் தாண்டி அவரது பணிக்காலத்தை அடுத்த 3 வருடத்திற்கு நீட்டிப்படும் என எதிர்பார்த்த நிலையில் ரகுராம் ராஜன் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இக்கடிதத்தில் 3 வருடப் பணி முடிந்த உடன் என்னை ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதிவியில் இருந்தும், பணியில் இருந்தும் முழுமையாக விடுவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் எனக் கொல்கத்தா பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தைச் சரிவில் பாதையில் இருந்து நிலையான மற்றும் நீண்டகால முன்னேற்றத்திற்கு முக்கியப் படிகளை அமைத்த ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனின் 3 வருடப் பணிக்காலம் வருகிற செப்டம்பர் மாதம் முடிவடைகிறது. ரகுராம் ராஜன் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பணியில் அமர்த்தப்பட்டாலும், பிதமர் மோடியுடன் சிறப்பான நட்பையும், நன்மதிப்பையும் பெற்றார் ராஜன். இதற்குக் காரணம் ராஜனின் இந்திய பொருளாதாரம் குறித்த தொலைநோக்குச் சிந்தனை. ராஜனின் பணி நீட்டிப்பு குறித்து மோடி மிகவும் ஆர்வமுடன் இருந்தாலும், NDA அரசின் பல அமைச்சர்கள் ரகுராம் ராஜனின் 2வது பணிக்கால நீட்டிப்புக்கு எதிராக உள்ளனர். இதில் சுப்ரமணியன் சாமி தனி... மத்திய அமைச்சர் சுப்ரமணியன் சாமி, ராஜனை பதவிவிட்டு விலக்க வேண்டும் என்பதில் உறுதியாக மட்டும் அல்லாமல் பல முறை வெளிப்படையாகவும் கூறினார். ரகுராம் ராஜன் ஆர்பிஐ கவர்னர் பதவிக்குத் தகுதியானவர் இல்லை. அவரை உடனடியாகப் பதவியில் இருந்து விலக்க வேண்டும் எனக் கூறினார். இதுகுறித்துத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் வாசகர்களிடம் கருத்துக் கேட்டபோது 78 சதவீதம் பேர் சு.சுவாமிக்கு எதிராக உள்ளனர். மேலும் கவர்னர் பதவி விலகல் பிறகு ராஜன் அமெரிக்கா சென்று இந்திய பொருளாதாரம் குறித்துத் தனது ஆய்வைத் தொடர உள்ளதாகத் திட்டமிட்டுள்ளார் எனவும் இந்தக் கொல்கத்தா பத்திரிக்கை தெரிவித்துள்ளது. ரகுராம் ராஜனின் கறார் நடவடிக்கை மற்றும் ஒளிவு மறைவு இல்லாத நேரடி கருத்துகள் நிதியமைச்சகத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும் ராஜனுக்கும் பல முறை கருத்து வேறுபாடு வந்துள்ளது. இந்நிலையில் ராஜனின் பணி நீட்டிப்பு குறித்து இதுவரை நிதியமைச்சகம் எவ்விதமான பேச்சுவார்த்தையும் செய்யவில்லை என இத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுவரை ராஜன் குறித்துப் பல்வேறு விதமான பல்வேறு தரப்பினர் கருத்தை தெரிவித்த போதிலும் எதற்குச் செவிசாய்க்காமல் அமைதி காத்த ராஜன் தற்போது இந்தியாவை விட்டு வெளியேறத் தயாராகிவிட்டார். ஏற்கனவே தனது குடும்பம் அமெரிக்கா சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. ராஜன் பதவியேற்றிய பின் ரூபாய் மதிப்புச் சரிவு குறித்து முக்கியப் பணிகளைச் செய்தார். இதன் மூலம் ரூபாய் மதிப்பு சிறிது காலம் வலிமை அடைந்தாலும், மத்திய நிதியமைச்சகத்தின் பல்வேறு நடவடிக்கை மற்றும் கொள்கை மாற்றத்தின் மூலம் மீண்டும் சரிய துவங்கியது. மேலும் முதல் முறையாக ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியாவில் உள்ள வணிக வங்கிகள் அனைத்தும் தங்களது வரவு கணக்குகளைச் சுத்தகம் செய்யக் கட்டளையிட்டார். இதன் பின்னரே இந்திய வங்கிகளில் புதைந்துள்ள பல பில்லியன் டாலர் மதிப்பிலான வராக் கடன் வெளிச்சத்திற்கு வந்தது. இதன் வெளிப்பாடே விஜய் மல்லையா, அலோக் இண்டஸ்ட்ரீஸ் போன்றவை. 53 வயதான ரகுராம் ராஜன் ஐஐடி டெல்லி, ஐஐஎம் அகமதாபாத், அமெரிக்காவின் மிகப்பெரிய கல்வி நிறுவனமாக விளங்கும் எம்ஐடி கல்லூரியில் பிஎச்.டி பட்டங்களைப் பெற்றுள்ளார். ரிசர்வ் வங்கியின் 23வது கவர்னராகப் பதவியேற்கும் முன் ராஜன் நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தார். இதன் முன் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுநராக இருந்தார். மேலும் 2008-2009ஆம் ஆண்டுச் சர்வதேச பொருளாதார நெருக்கடி குறித்து 2005 ஆண்டே எச்சரிக்கை விடுத்தார்.
ரகுராம் ராஜன்
மோடி- ராஜன்
சுப்ரமணியன் சாமி
வாசகர் கருத்து
அமெரிக்கா
நிதியமைச்சகம்
அமைதி காத்த ராஜன்
ரூபாய் மதிப்பு
வங்கி வராக்கடன்
டெல்லி முதல் எம்ஐடி வரை...
பதவிகள்
நியூஸ்லெட்டர்
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications