பெங்களுரூ: குவிக்கர் மற்றும் ஓஎல்எக்ஸ் நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்தியாவில் புதிய கடையை விரித்துள்ளது அமேசான்.
உலகின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசானின் கிளை நிறுவனமான ஜங்கிளி(Junglee) மூலம் இந்தியாவில் Second-hand பொருட்களை விற்பனை செய்யும் இணையச் சேவையைத் துவங்கியுள்ளது.
மொபைல் போன், டேப்லெட், வாட்ச், புத்தகம், போன்ற பல பொருட்களை (பயன்படுத்தப்பட்ட பொருட்கள்) ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் இச்சேவையின் சோதனை முறையைப் பெங்களூரு வாடிக்கையாளர்களுக்கு அளிக்கத் துவங்கியுள்ளது அமேசான்.
சந்தையில் நேரடி விற்பனையாளர்களைப் பெற முடியாத வாடிக்கையாளர்களுக்கு இச்சேவை அதிகளவில் பயன்படும் என அமேசான் தெரிவித்துள்ளது.

குவிக்கர் மற்றும் ஓஎல்எக்ஸ் நிறுவனத்திற்கு நேரடியாகப் போட்டி அளிக்கும் வகையில் அமேசான் இச்சேவையை அறிமுகம் செய்துள்ளது. இத்தகைய சேவையில் குவிக்கர் மற்றும் ஓஎல்எக்ஸ் பல வருடங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்காவில் மற்றும் பிற உலக நாடுகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் விற்பனையில் கடந்த 1995ஆம் ஆண்டு முதலே ஈபே நிறுவனம் முன்னணி நிறுவனமாக உள்ளது குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் குவிக்கர் நிறுவனம் சுமார் 25 முக்கிய நகரங்களில் உள்ளது.


Click it and Unblock the Notifications