மும்பை: நாட்டின் முன்னணி நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா சந்தை வர்த்தகத்தில் இருக்கும் 10 கோடி பங்குகளை, 335 ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 3,650 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஒப்புதலை நிர்வாகம், சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பு, மத்திய அரசு ஆகிய அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் ஒப்புதல் அளித்துள்ளது எனக் கோல் இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டம் திங்கட்கிழமை நடந்தது, இதில் நிறுவனத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது மட்டும் அல்லாமல் நிதி சார்ந்த பல விஷயங்கள் பங்குதாரர்கள் உடன் விவாதிக்கப்பட்டது.
கோல் இந்தியா நிர்வாகம் மற்றும் பங்குதாரர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் சந்தையில் இருக்கும் 10,89,55,223 பங்குகளை வங்க இருதரப்பு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, அதுமட்டும் அல்லமல்ல சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையம், மத்திய அரசு தரப்பு உள்ளிட்ட பங்குவிற்பனைக்குத் தொடர்புடைய அனைத்து அமைப்புகளும் ஒப்புதல் அளித்துள்ளது.
மார்ச் 31,2016ஆம் தேதி முடிவில் கோல் இந்தியா நிறுவனத்தின் 79.65 சதவீத பங்குகளை மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.