இந்தியாவில் உள்நாட்டுப் பயணிகள் விமானச் சேவை வழங்கி வந்த விஸ்தாரா நிறுவனம், மத்திய விமானப் போக்கவரத்து துறையின் புதிய மாற்றங்கள் மூலம் முதல் முறையாகக் கடல் தாண்டி பயணம் செய்ய உள்ளது.
டெல்லி, மும்பை, கோவா, சென்னை, பெங்களுரூ எனப் பல்வேறு இந்திய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து சேவை அளித்து வந்த விஸ்தாரா நிறுவனம் தற்போது அயல்நாட்டுக்கு பறக்க முடிவு செய்துள்ளது. இதன் படி தென் ஆசிய பகுதிக்கு பறக்கத் திட்டமிட்டுள்ளது.
விஸ்தாரா
டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த விஸ்தாரா இதுநாள் வரை உள்நாட்டு விமானச் சேவை மட்டுமே அளித்து வந்தது. அதுவும் பயணிகள் சேவை மட்டும், சரக்குப் போக்குவரத்தில் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5/20 விதி நீக்கம்
இந்தியாவில் ஏந்தொரு விமான நிறுவனமாக இருந்தாலும் சரி 5 வருடம் உள்ளாட்டு விமானச் சேவை அளித்த பின்பே வெளிநாடுகளுக்கு விமானச் சேவை அளிக்க அனுமதிக்கப்படும். இதனுடன் இந்த 5 வருடத்திற்குள் சுமார் 20 விமானங்களைச் சேவையில் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
தளர்வு
இப்புதிய விமானப் போக்குவரத்துக் கொள்கை மாற்றத்தில் 20 விமானங்களை உள்நாட்டுச் சேவையைப் பயன்படுத்தி இருந்தாலே போதும் வெளிநாடுகளுக்குச் சேவை அளிக்கத் துவங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5 வருடம் சேவை அளித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
லாபம்..
இந்த 5/20 விதி மாற்றத்தால் இந்தியா சந்தையில் புதிதாக இறங்கியுள்ள விஸ்தாரா மற்றும் ஏர்ஏசியா உள்நாட்டில் 20 விமானங்களைச் சேவையில் உட்படுத்திவிட்டு வெளிநாடுகளுக்குச் சேவை அளிக்கலாம்.
புதிய விமானங்கள்
மத்திய அரசின் தளர்வுகளை அடுத்து விஸ்தாரா தற்போது புதிய விமானங்களை ஆர்டர் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவைத் தாண்டி பறக்க விஸ்தாரா தயாராகி வருகிறது என இந்நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரியான சஞ்சிவ் கபூர் தெரிவித்தார்.
முதல் பயணம்
விஸ்தாராவின் முதல் அயல்நாட்டுப் பயணத்தில் நேரம் 3 மணிநேரத்தில் இருந்து 3.30 மணிநேரம் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். இப்பயணம் தற்போது வர்த்தகத்தில் உள்ள ஏ320 ரக விமானத்தில் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
தற்போதைய நிலையில் இதன் இலக்கு தென் ஆசியா மற்றும் சார்க் நாடுகள் தான்.
2018ஆம் ஆண்டு
தற்போது இந்நிறுவனம் 11 ஏ320 விமானங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளது, 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் இதன் எண்ணிக்கை 13ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. 2018ஆம் ஆண்டுக்குள் முழுமையான அயல்நாட்டுச் சேவையில் விஸ்தாரா இறங்கும் என உறுதியளித்துள்ளது.
விமானப் போக்குவரத்துக் கொள்கை
இந்தியாவில் விமானப் போக்குவரத்து புதிய உச்சத்தை அடைந்து வரும் இத்தகைய தருணத்தில், நடைமுறைக்கு ஏற்றவாறு கொள்கையை மாற்றி அமைப்பதே உத்தமம்.
இந்நிலையில் 10 வருடத்திற்கு மேலாக எவ்விதமான மாற்றம் செய்யாமல் அப்படியே இருக்கும் விமானப் போக்குவரத்துக் கொள்கையில் மத்திய அரசு மாற்றியுள்ளது இத்துறை வளர்ச்சிக்கு புதிய அடித்தளமாக அமையும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications