குறைந்த விலையில் உள்நாட்டு விமான சேவை அளிக்கும் கோ ஏர், இண்டிகோ மற்றும் ஏர் ஆசியா நிறுவனங்கள் விமான மையத்தில் இருந்த வெளியிட இருக்கும் புதிய உத்தரவை அடுத்து பேக்கேஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ளன.
இந்த விமான நிறுவனங்கள் முன்பு 20 கிலோவிற்கும் கூடுதலாக எடுத்து வரும் ஒரு கிலோ பேக்கேஜ்க்கு ரூ.250 கட்டணமாகப் பெற்றுவந்தன. தற்போது இதை ரூ.300 ஆக உயர்த்தியுள்ளன.
தற்போது விமான போக்குவரத்து மையம் அதிகப்படியான பேக்கேஜ்க்கான கட்டணத்தை எவ்வாறு மாற்ற இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
க்ராஸ் மானியம்
வான்வழி ஆலோசகர் அனுராக் ஜெயின் கூறுகையில் அரசாங்கத்தின் வழிமுறைகளுக்கு எதிரானது, கூடுதல் பேக்கேஜ்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
20 கிலோவிற்கு அதிகமாக எடுத்துச் செல்பவர்கள், 20 கிலோவிற்கும் குறைவாக எடுத்து வரும் பேக்கேஜ்களுக்கு சேர்த்து கட்டணம் செலுத்துவது போல இது உள்ளது.
ஏர் இந்தியாவில் 25 கிலோ
தற்போது உள்நாட்டு விமான சேவைகளில் ஏர் இந்தியாவைத் தவிர பிற விமான நிறுவனங்கள் 15 கிலோ வரை பயணச் சாமான்களை இலவசமாக அனுமதிக்கின்றன.
இதுவே ஏர் இந்தியாவில் 25 கிலோ வரையில் பேக்கேஜ்களை இலவசமாக எடுத்துச் செல்லாலாம்.
முன்பே வாங்குதல்
பெரும்பாலான உள்நாட்டு விமான சேவைகளில் கூடுதலாக எடுத்து வரும் பேக்கேஜ்களுக்கு ஏஜெண்ட்கள், இணையதளங்கள் வாயிலாக டிக்கெட் புக் செய்பவர்களுக்குச் சலுகை கட்டண வசதியை அளிக்கின்றன.
கோஏர் விமான நிறுவனம் கூடுதலாக எடுத்து வரும் 10 கிலோ பேக்கேஜ்களுக்கு முன்பே கட்டணமாக செலுத்தும் போது ரூ.3,000-க்கு ரூ.2,000 செலுத்தினால் போதும்.
ஐந்து கிலோ சலுகை விலை
உள்நாட்டு விமான யூனியன், விமான துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி அனைத்து உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களிடமும் கூடுதலான ஐந்து கிலோவிற்கு ஒரு கிலோவிற்கு ரூ. 100 கட்டணமாக வசூலிக்கக் கோரிக்கை விடுத்துள்ளன.
பிற விமான சேவைகள்
20 கிலோவிற்கு அதிகமாக எடுத்துவரும் பயணிகளிடம் கிலோவிற்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் ரூ.300, ஜெட் ஏர்வேஸ் ரூ.350, விஸ்த்ரா ரூ.300 எனவும் வசூலிக்கின்றன.
ஜெட் ஏர்வேஸ் உட்பட பெரும்பாலான விமானங்களில் ஒரு கை பையாக 7 கிலோ வரியிலும் , அதுவே பிஸ்னஸ் கிளாஸ் ஆக இருந்தால் 10 கிலோ வரையும் ஒரு லேப்டாப்பும் இலவசமாக எடுத்துச் செல்லலாம்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
5 கிலோ கூடுதல் பேக்கேஜ்களுக்கான கட்டண குறைப்பை எதிர்த்து கோ ஏர், இண்டிகோ ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் டெல்லி உயர் நீதி மன்றத்தை நாடியுள்ளன.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications