மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முந்திய பணவீக்க இலக்கான 4 சதவீதத்தை 2017ஆம் நிதியாண்டின் முடிவில் கண்டிப்பாக எட்டுவோம் என உறுதியளித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர், ஜிஎஸ்ட் அமலாக்கம், சர்வதேச சந்தையைச் சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு இலக்கைக் கண்டிப்பாக எட்டி முடியும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நாணய கொள்கை வடிவமைக்குப் புதிய குழு அமைக்கப்படும் நிலையில், நாட்டின் பணவீக்கத்தை அதிகப்படியான அளவாக 6 சதவீதத்தையும், குறைவான அளவாக 2 சதவீத்தையும் நிர்ணயம் செய்துள்ளது புதிய நாணய கொள்கை அமைப்பு.
அடுத்த 3 காலாண்டுகளுக்குச் சில்லறை பணவீக்கத்தை 2-6 சதவீதத்திற்குள் நிலைப்படுத்த வேண்டும் இல்லையென்றால் பணவீக்கம் இலக்கை விடவும் அதிகமாக உயர்ந்து விடும்.