டெல்லி: உலகளவில் அனைத்து மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய கனவாக இருப்பது அமெரிக்கா. அமெரிக்காவில் சில வருடங்கள் வேலை செய்துவிட்டால் போதும் மொத்த வாழ்க்கையும் செட்டில் ஆகிவிடும் என்பதே இத்தகைய ஆர்வத்திற்கு அடித்தளம்.
அந்த வகையில் அமெரிக்காவில் சென்று வேலை செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொருவருக்கும் ஹெச்-1பி விசா மிகவும் அவசியம்.
இந்நிலையில் அக்டோபர் 2014 முதல் செப்டம்பர் 2015ஆம் ஆண்டுக் காலத்தில் அமெரிக்கா அளித்துள்ள மொத்த ஹெச்-1பி விசாவில் 70 சதவீத விசாக்கள் இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது அமெரிக்கத் தூதரக விவகார துறை செயலாளர் மைக்கெல் பாண்ட் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஓபாமா அரசு தற்போது நடைமுறையில் உள்ள திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த முடிவு செய்துள்ளதையும் அவர் தெரிவித்தார். மைக்கெல் பாண்ட் செவ்வாய்க்கிழமை 5வது தூதரக மாநாட்டில் கலந்துகொண்ட போது செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
மேலும் அக்டோபர் 2014 முதல் செப்டம்பர் 2015ஆம் ஆண்டுக் காலத்தில் அமெரிக்க அரசு இந்தியர்களுக்கு 11,000 ஹெச்-1பி விசா வழங்கியுள்ளது. இக்காலகட்டத்தில் அமெரிக்க உலக நாடுகளுக்கு அளித்த மொத்த விசாவில் 70 சதவீதம் என்பதையும் மைக்கெல் குறிப்பிட்டார்.
அதேபோல் இக்காலகட்டத்தில் உலக நாடுகளுக்கு வழங்கிய மொத்த எல்-1 விசாவில் 30 சதவீதம் இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதையும் அமெரிக்கத் தூதரக விவகார துறை இந்தச் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியாகவே அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அமைச்சர்கள் விசா கட்டணத்தை உயர்த்தவும், இந்தியாவிற்கு வழங்கும் விசா எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் புதிய மசோதாவைக் கொண்டு வர வலியுறுத்தினர். தற்போது இந்தப் புதிய மசோதா நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்டர்நெட் மூலம் இப்படியும் பணம் சம்பாதிக்கலாம்.!
More From GoodReturns

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications