இண்டர்கனக்ட் பயன்பாடு கட்டணங்கள் என்பது ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் பிற நிறுவனத்தின் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளும் போது அழைப்பு செய்யப்படும்.
ரிலையன்ஸ் ஜியோவும் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனமும் பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள இண்டர்கனக்ட் பயன்பாடு கட்டணங்கள் குறித்த வழக்கிற்கு எதிராகப் பேசியுள்ளன.
இண்டர்கனக்ட் பயன்பாடு கட்டணங்கள் என்பது ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் பிற நிறுவனத்தின் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளும் போது அழைப்பு செய்யப்படும் நிறுவனம் எதிர் தரப்பு நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணமாகும்.
டிராய் விதித்துள்ள கட்டணங்கள்
இப்போது உள்ள சூழலில் தரை வழியில் இருந்து வயர்லெஸ் இணைப்புகளைத் தொடர்பு கொள்ளும் பொது இலவசமாகவும், வயர்லெஸில் இருந்து வயர்லெஸ் நெட்வொர்க்கை தொடர்பு கொள்ளும் போது நிமிடத்திற்கு 14 பைசா கட்டணமாகவும் உள்ளது. இதனை நெறிப்படுத்த வேண்டும் என்று ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளன.
இந்த வழக்கிற்கு எதிராக ரிலையன்ஸ் நிறுவனமும், டாடா டெலி சர்விசஸ் நிறுவனமும் தலைமை நீதிபதி ஜி ரோகினி மற்றும் நீதிபதி சங்கீதா திங்ரா சேகலிடன் மனுக்களை அளித்துள்ளனர்.
வழக்கறிஞர் கருத்து
ஒரு தரப்பிறாகாக வாதாடும் மூத்த வழக்கறிஞர் ப சிதம்பரம் இது பற்றி கூறும் போது குறைந்த அளவிலான வாடிக்கையாளர்கள் கொண்ட நிறுவனங்களுக்கு எந்தச் சிக்கலும் இதில் இல்லை என்றும் அதிக வாடிக்கையாளர்கள் உடைய நிறுவனங்களே இதில் பாதிக்கப்படுகின்றன என்று கூறுகிறார்.
மேலும் இவர் வாதாடும் போது டிராய் நிர்னைத்துள்ள இந்த விலையால் சேவை வழங்குநர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெறும் நட்டத்தை எதிர்கொள்வதாகவும் வாதாடினார்.
எடுத்துக்காட்டு
என்னுடன் நல்ல உள்கட்டமைப்பு உள்ளது அதனை பயப்படுத்தி பிறர் லாபம் பார்க்கின்றார் என்றால் அதில் இருந்து குறிப்பிட்ட வருவாயை எனக்கு அளிக்க வேண்டும் என்று இவை கூறினார். அடுத்து இந்த வழக்கு ஜனவரி 9-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகின்றது.
வழக்கு
வோடாபோன் நிறுவனம் முதலில் இந்த வழக்கை நவம்பர் 2015-ம் ஆண்டு துவங்கியது. பின்னர் ஏர்டெல் நிறுவனமும் டிராயிக்கு எதிரான இந்த வழக்கில் இணைந்தது. இப்போது ஜியோவும், டாடா நிறுவனமும் ஏர்டெல் மற்றும் வோடாபோனுக்கு எதிராக மனுவைத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications