ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து இன்னும் அட்டை பெறாதவர்கள் ஆதார் சேர்க்கை எண்ணை அளிக்க வேண்டும்.
டெல்லி: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் ஜனவரி 4-ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1995 ஆம் ஆண்டின் ஊழியர்கள் பென்ஷன் திட்டம்(EPS) மற்றும் பிற ஓய்வூதிய திட்டங்களில் ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் என அனைவரும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து இன்னும் அட்டை பெறாதவர்கள் ஆதார் சேர்க்கை எண்ணை அளிக்க வேண்டும்.
கடைசி நாள்: ஜனவரி 31
ஓய்வூதியம் வாங்கும் உறுப்பினர் இன்னும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால் 2017 ஜனவரி 31-ம் தேதிக்குள் அருகில் உள்ள ஆதார் அட்டைச் சேர்க்கை மையங்களை அணுகி விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டைச் சேர்க்கை மையங்கள் அருகில் இல்லாதவர்களுக்கு ஊழியர்கள் வருங்கால வைப்பு ஆணையம் ஆதார் அட்டைச் சேர்க்கைக்கான வசதிகளைச் செய்து தரும்.
ஆதார் அட்டை எண் இல்லாதவற்கள் என்ன செய்ய வேண்டும்?
ஓய்வூதிய உறுப்பினர்கள் அல்லது தனிநபர்கள் இன்னும் ஆதார் எண்ணைப் பெறவில்லை என்றால் அல்லது இன்னும் இனிமேல் தான் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கப் போகிறீர்கள் என்றால் பின்வரும் ஆவணங்களை ஓய்வூதிய திட்டங்களின் கீழ் சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் அளித்த அடையாள சான்றிதழ் மற்றும் யூஏஎன் இரண்டையும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஓய்வூதிய உறுப்பினர் அல்லது ஓய்வூதியம் பெறும் சந்தாதாரின் ஆதார் சேக்கை ஐடி அல்லது ஆதார் சேர்க்கை கோரிக்கைக்கான நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பின்வரும் ஆவணங்களில் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்
1. வாக்காளர் அடையாள அட்டை
2. பான் கார்டு
3. பாஸ்போர்ட்
4. ஓட்டுநர் உரிமம்
5. அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் அல்லது ஒரு தாசில்தார் தனது உத்தியோகபூர்வ லெட்டர்பேட் மூலம் அளித்த புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்று.
6. ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் அளித்த பிற ஆவணம் ஏதேனும் ஒன்று.
மேலே கூறியுள்ள ஆவணங்களை ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் அமைத்துள்ள அலுவலரால் அவர்களது அலுவலக இணைப்புகளுடன் சரிபார்த்து பெற்றுக்கொள்வார்.
வெளிப்படையான ஆவணம்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் இது பற்றி அறிக்கை வெளியிடும் போது மத்திய அரசு சேவைகள் மற்றும் பலன்களைப் பெறக்கூடியதற்கான ஒரு வெளிப்படையான ஆவணமாகவே ஆதார் அட்டை விவரங்கள் பெறப்படுவதாகத் தெரிவித்தனர்.
எதற்காக ஆதார் அட்டையை இணைக்க வேண்டும்
மேலும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் ஓய்வூதிய உறுப்பினர்களுக்கு உதவுதற்காகச் சில ஏற்பாடுகளையும், இலவச சலுகைகளையும் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே தொடர்ந்து EPS, 1995-ன் கீழ் ஓய்வூதிய சலுகைகளைப் பெற ஆதார் விவரங்கள் தேவை என்று ஊடகங்கள் மூலம் அறிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications