டெல்லி: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் மக்கள் மத்தியில் மதிப்பை இழந்தாலும், பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்கியே ஆக வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.
இதன் வாயிலாகப் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்பு ஏடிஎம் மற்றும் வங்கிகளில் பணப் பரிமாற்ற அளவுகளைப் படிப்படியாக உயர்த்தி வந்த மத்திய அரசு 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், 30,000 ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புடைய பணப் பரிமாற்றங்களுக்குப் பான் கார்டை கட்டாயமாக்க உள்ளது.
பான் கார்டு
தற்போது நடைமுறையில் 50,000 ரூபாய் மற்றும் அதற்கு அதிகமாக வங்கிகளில் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் பான் கார்டு வழங்க வேண்டும்.
இந்தியாவில் பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில், இதன் அளவுகளை 30,000 வரையில் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
சிறப்புக் கட்டணம்
அதுமட்டும் அல்லாமல் 30,000 ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையைப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்குப் பயன்பாடு கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசல் பணப் பரிவர்த்தனை
இதன் மூலம் அதிகளவில் பணத்தைக் கையாளும் மக்களின் பணிகள் முடங்குவதும் ஒரு புறம் இருந்தாலும், அனைத்து பரிமாற்றங்களும் வங்கியின் வாயிலாக நடைபெறும் என்று மத்திய அரசு நம்புகிறது.
வியாபாரிகள் கணக்குகள்
தனிநபர் கணக்குகள் மட்டுமல்லாமல், வியாபாரிகளின் பணப் பரிமாற்றங்களிலும் கைவைக்கிறது மத்திய அரசு. பான் கார்டு கட்டாயமாக இருக்கும் 2 லட்சம் ரூபாய் பணப் பரிமாற்றத்தை தற்போது 1 லட்சம் ரூபாயாகக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ஆதார்
வங்கி பணப் பரிமாற்றங்களுக்குப் பான் கார்டு இல்லாதவர்கள், இனி ஆதார் கார்டு எண்ணையும் பயன்படுத்தலாம் என்ற அறிவிப்புப் பட்ஜெட் அறிக்கையில் வெளியாகும் எனத் தெரிகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications