ரயில்வே பட்ஜெட் இல்லாமல் முதன் முறையாக நாளைப் புதன்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது. பட்ஜெட் கூட்டத்தை இன்று பாராளுமன்றத்தில் துவக்கி வைத்துப் பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ரயில்வே பட்ஜெட் உடன் மத்திய பர்ஜெட் இணைக்கப்பட்டு வரலாறு படைக்க இருக்கின்றது என்று கூறினார்.
குடியரசு தலைவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உறையில் நிதி சேர்க்கை, சமுகத் திட்டங்கள் மற்றும் பெண்கள் அதிகாரம் குறித்துப் பல முக்கிய அம்சங்கள் இருந்தன.
ஊழல் மற்றும் கருப்புப் பணம்
நமது நாட்டு மக்கள் ஏழையாக இருக்கக் காரணமாகக் கருப்புப் பணம் மற்றும் ஊழல் முக்கியப் பங்கை வகிக்கின்றது.
விவசாயிகள்
விவசாயிகளின் வாழக்கையை மெருகேற்ற எனது அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. 26 கோடிக்கும் அதிகமானோருக்கு ஜன் தன் வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளது.
தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா
நடப்பு நிதி ஆண்டில் சுய உதவி குழுவினருக்கு 16,000 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.
போஸ்டல் பேமெண்ட்ஸ் பேங்க்
வங்கி சேவையை வீட்டின் வாசலுக்கே எடுத்துச் செல்ல ஏழை முதல் வங்கி கணக்கு இல்லாதவர்கள் வரை அனைவரும் வங்கி சேவையைப் பெற போஸ்டல் பேமெண்ட்ஸ் பேங்க் துவங்கப்பட்டது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு இல்லாத 5.6 கோடி பேருக்கு 2 லட்சம் வரை கடன் அளிக்கப்பட்டு வீடு கட்ட உதவி செய்யப்பட்டுள்ளது.
சம வாய்ப்புகள்
அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்க அரசு வழிவகைச் செய்துள்ளது. பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக், தீபா ஆகியோர் வலிமை மிகுந்த பெண்களாக விளக்குகின்றன.
மிஷன் இந்திரதுஷ்
போலியோ, காசநோய், மஞ்சள் காமாலை போன்ற தடுக்கக் கூடிய நோய்களுக்கு எங்கும் எப்போதும் எல்லாக் குழந்தைகளுக்கும் மிஷன் இந்திரதுஷ் வழியாக மருத்துவச் சேவை அளிக்கப்பட்டுள்ளது.
திறன் மேம்பாடு
இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு பயிற்சிகள் மற்றும் தமது வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.
மகப்பேறு உதவி
வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்கு மகப்பேறு உதவி சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
கருப்புப் பணம்
நவம்பர் மாதம் 8-ம் தேதி பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்து கருப்புப் பணம் போன்றவற்றை வெளியில் கொண்டு வந்துள்ளது அரசு.
வட கிழக்குப் பகுதிகள்
வட கிழக்கு ரயில் பாதைகள் மீட்டர் கேஜில் இருந்து பிராட் கேஜாக மாற்றப்பட்டது. மேலும் வட கிழக்கு மாநிலங்களுக்குப் பிபிஓ மூலம் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டன.
இணையம்
பாரத்நெட் திட்டம் வாயிலாக ஆப்டிகல் ஃபைபர் கேபிள் உதவியால் 75,700 கிராம் பஞ்சாயத்துகளுக்கு இணையதளம் இணைப்பு வழங்கப்பட்டது.
செயல்பாட்டுப் பயணங்கள்
இந்திய வானிலை ஆய்வு, ஊடுருவல், புவி கூர்நோக்கு மற்றும் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள் உள்ளடக்கிய 8 செயல்பாட்டுப் பயணங்கள் தொடங்கப்பட்டது
ரயில் மற்றும் தார் சாலைகள்
அண்டை நாடுகளுடன் இணைப்பதற்கான ரயில் மற்றும் தார் சாலைகள் பணிகள் போன்றவை உருவாக்கியதால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு அரசு வித்துட்டுள்ளது.