சஞ்சீவ் சன்யால் முதன்மை பொருளாதார ஆலோசகராக நியமனம்..!
டாய்ச்சிஸ் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரான சஞ்சீவ் சன்யால் மத்திய பொருளாதார விவகாரத் துறையின் முதன்மை பொருளாதார ஆலோசகரான நியமிக்கப்பட்டுள்ளார்.
டாய்ச்சிஸ் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரான சஞ்சீவ் சன்யால் மத்திய பொருளாதார விவகாரத் துறையின் முதன்மை பொருளாதார ஆலோசகரான நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. சஞ்சீவ் சன்யால் அடுத்த 3 வருடத்திற்கு இப்பதவியில் இருப்பார்.
2008ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் டாய்ச்சிஸ் வங்கியின் தலைமை பொருளாதார வல்லுனர் மற்றும் குளோபல் சந்தை ஆராய்ச்சி பிரிவின் தலைவராக இருந்தார். தற்போது சிங்கப்பூர் கொள்கை ஆய்வு அமைப்பில் முக்கியப் பதவியில் இருக்கிறார்.
சஞ்சீவ் சன்யால் அவர்களின் 3 வருடப் பணிக்காலத்தில் 15 படிகளில் இவரின் சம்பளம் 67,000 மற்றும் 79,000 ரூபாய் அளிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications