பெங்களூரு: தமிழகத்தைப் போன்றே கர்நாடவாவிலும் வரும் நடப்பு ஆண்டு முதல் மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி, எகனாமிக்ஸ்க்குத் தனிப் பலகலைக்கழகம் எனத் திட்டங்கள் அதிரடியாக உள்ளது.
எகனாமிக்ஸ் பலகலைக்கழகம்
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் போன்று பெங்களூரு டாக்டர் அம்பேத்கர் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்க்கும் அனுமதி.
பள்ளி மானவர்களுக்கு ஷூ, சாக்ஸ்
8 முதல் 10 வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஷூ, சாக்ஸ், சுடிதார் வழங்கப்படும். பள்ளிக் குழந்தைகளுக்குச் சமூகச் செய்தியுடன் கதை புத்தகங்கள், மூக்குக் கண்ணாடி போன்றவை வழங்கப்படும்.
இலவச மடிக்கணினி
முதலாம் ஆண்டுப் படிக்கும் பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் மற்றும் முதல் கிரேடு கல்லூரிகள் படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
முட்டை
அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி வாரத்திற்கு இரண்டு முட்டை வழங்கப்படும்.
ராய்ச்சூர் பல்கலைக்கழகம்
ராய்ச்சூர் மற்றும் யாதகிரி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்குப் பிரத்தியேகமாக ராய்ச்சூர் பல்கலைக்கழகம். கிராமங்களில் 25 புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் அமைக்கப்படும்.